பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வொருவரும் தனித்தனியாகவும் மக்களின் மனச்சாட்சியாக இரு ந்தாக வேண்டும். மேலும், எனது . இளம் நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுவது இதுதான்: ஓர் இளம் நூலாசிரியருக்கு, எழுதுவது என்பது எப்போதுமே எளிதாக இருந்து விடுவதில்லை; உண்மையில் அவர் மிகப்பல சமயங்களில் மிகவும் கடினமாகப் பாடுபட்டுத்தான். எழுத வேண்டியிருக்கும் என்பதும் முற்றிலும் உண்மைதான்; என்றாலும், உங்கள் மனத்தில் இன்னும் முற்றிலும் சரிவர உருவாகாத ஒன்றை, வார்த்தைகளாக மாற்றி எழுதுவதில் அவசரமே காட் டாதீர்கள். நீங்கள் படைத்தளிக்கும் புத்தகம் ஒரு வரவேற்பைப் பெற வேண்டும்; ஒரு நீண்ட வாழ்வை வாழ வேண்டும். இலக்கியத்துக்குள் மேலும் மேலும் புதிய ரத்தம் பாய்ந்து கொண்டிருக்கிறது: ராஸ்தாவ் எழுத்தாளர் ஸ்தாபனத்தின் உறுப்பினர் தொகை இடையறாது அதிகரித்து வருகிறது. போருக்கு முன்னரும் கூட ராஸ்தாவ் எழுத்தாளர்களின் பிரகாசமான தாரகை மண்டலமொன்றைக் கொண்டிருந்தது. கவிஞர் கிரிகோரி காத்ஸ், அற்புதமான திறமை படைத்த வசன இலக்கிய கர்த்தா அலெக்சாந்தர் புஸ்கின் ஆகியோர் இருந் தனர். அவர்கள் இருவரும் நமது தாயகத்தை வீராவேசத்தோடு பாதுகாத்து நின்று, போரில் வீழ்ந்து பட்டனர். அணிகளில் அவர்களது இடத்தைப் பூர்த்தி செய்ய புதிய, இளம் எழுத்தாளர் கள் வந்தனர்; நீங்களும் கூட, காலக்கிரமத்தில் உங்களது மூத்த தோழர்களின் இடத்தை ஏற்றுக் கொள்வீர்கள். நாம் அனை வரும் சேர்ந்து, சோவியத் எழுத்தாளர்களின் மாபெரும் படை பாக, சொல்லப் போனால், ஒரு வலிமைமிக்க இலக்கியப் பட்டாளத்தின் முஷ்டி.' 'யாக விளங்கி வருகிறோம். இப்போது நீங்கள் நமது படைப்பாக்க முயற்சிகளைப் பற்றிப் பேசுவதற்காக இங்கு கூடியுள்ளீர்கள். இது மிகவும் நல்லதுதான். இந்தப் பிரச்சினைகளைச் சூடாகவும் உணர்ச்சி வேகத்தோடும் விவாதிக்கத்தான் வேண்டும். நீங்கள் வேலையில் உங்கள் இதயத் தையே ஈடுபடுத்தியாக வேண்டும்; உங்களது சர்வ பலத்தோடும் நீங்கள் உங்களை நமது சிரமமான தொழிலுக்கு அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். நான் மீண்டும் ஒருமுறை உங்களை எச்சரிக்க விரும்புகிறேன்: முதலில் நீங்கள் இந்தப் பணியில் எவ்வளவுதான் கடினமாகப் பாடுபட வேண்டியிருந்த போதிலும், எளிதான வெற்றியை மட்டும் என்றும் நாடாதீர்கள். என்னதான் இருந்தாலும் , நீங்கள்தான் எங்களுக்குப் பதிலாக இடம் பெறப் போகும் படை; 342