பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்றங்களையும் பெற்றிருக்கிறோம்-இவை எல்லாம் நமது இளைஞர்களுக்குச் சேவை புரியவே உள்ளன, நீங்கள் நாடக அரங்குக்கு அடிக்கடி சென்று வருவதுபோல், ராஸ்தாவில் வசித்துவரும் யுவதியர் செல்வதாக நான் கருதவே இல்லை - எனவே, இது காரணமாயிருக்க முடியாது, கிராம வாழ்க்கையில் உள்ளக் கிளர்ச்சியோ அல்லது புதிய அனுபவங்களோ குறைவாக இருப்பதை, வேலையின் மும்முரமான கதிவேகத்தினாலும், உங்களது வயதையொத்த மக்களோடு கொள் ளும் கூட்டுற வினாலும் கருத்துக்களினாலும்தான் ஈடுகட்டியாக வேண்டும், நாட்டுக்கு இளம் உழைப்பாளிகள் தேவை. தற்போது, சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்தியக் கமிட்டியின் மார்ச் பிளீனம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் ஒளியில், பெருமளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ; அரசாங்கப் பண்ணைத் தொழிலாளர்களுக்கும் கூட்டுப்பண்ணைகளுக்கும் நல்ல வாய்ப்புக்களுக்கு வழிகள் திறந்து விடப்பட்டுள்ளன; அவர்கள் மேலும் அதிகமான பணத்தைச் சம்பாதிப்பார்கள்; இது ஓர் இலக்கச் சக்தியாக விளங்கும் என்பது தெளிவு. நகரில் நல்லதொரு வசதியான குடித்தனப் பகுதியைப் பெறாதவர்களும், தாங்கள் விரும்பக்கூடிய விதத்தில் அங்கு ஒரு நல்ல வேலையில் அமராது போனவர்களுமான நபர்கள், கிராமங்களுக்குத் திரும்பி வருவார்கள், இந்தத் தலைகீழ் நிகழ்ச்சிப் போக்கில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். தொழில்துறையில் பணி புரிய விரும்பும் இளம் மக்களின் பாதையில் அரசாங்கமும் கட்சியும் தடைமுடைகளை ஏற்படுத்த முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் தாகன் ரே ாகுக்கோ அல்லது ராஸ்தாவுக்கோ செல்ல விரும்பு கிறீர்களா அல்லது இங்கேயே வெஷென்ஸ்காயாவில் தங்கியிருக்க விரும்புகிறீர்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும். விவசாயம் செய்யும் நிலத்திலேயே தங்கியிருக்க விரும்பும் ஒரு போற்றத்தக்க மனப்போக்கின் அறிகுறிகள் உள்ளன என்றே நாங்கள் கருதுகிறோம். தமது மத்தியிலுள்ள காம்சொமால் உறுப்பினர்கள் எல்லோரும் தத்தம் சொந்தக் கிராமத்திலேயே தங்கிப் பணி புரிந்து வரவேண்டும் என்ற ஏகோபித்த முடிவுக்கு வந்த, மாஸ்கோவுக்குச் சற்றுத் தள்ளி யுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அர்புஜோவ் பள்ளியின் பட்டதாரிகள், தெரெந்தி செம்யோனோவிச் மல்சேவைக் கண்டு பேசியுள்ளனர், மத்தியக் கமிட்டியின் மார்ச் பிளீனம்