பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கட்டுரைகளைத் தேடிக் கொடுத்துள்ளேன். ஆழ்ந்துப் படித்தால் ஓரளவாவது பயன் கிடைக்கும்.

பத்திரிகை நடத்துவது எப்படி? என்பதற்கான வரலாற்றையும் வழிகாட்டியாக வழங்கி இருக்கிறேன். அதற்கேற்ப அனுபவம், பெற்றால், நிச்சயமாக ஒவ்வொரு தமிழன்பரும் பத்திரிகை ஆசிரியராகலாம்; புகழ் பெறலாம்; ஏன் நாளை இந்த நாட்டைக் கூட ஆட்சி செய்யலாம் அல்லவா? அதற்கு சான்றுகளா இல்லை? நூலைப் படியுங்கள் பலர் இருப்பார்கள்!

இவ்வளவு ஏன்? தமிழ்நாட்டு வரலாற்றில் அறிஞர் அண்ணா அவர்களும், கலைஞர் அவர்களும் பத்திரிகை ஆசிரியர்கள் தானே!

நாட்டை ஆளாவிட்டாலும் பரவாயில்லை; உலக அறிஞர்கள் ஒவ்வொருவரும் பத்திரிகை வரலாற்றில் எவ்வாறு புகழ்பெற்றச் சாதனையாளர்களாக இன்றும் வரலாற்றில் காட்சி தருகின்றார்கள் என்பதற்காகவாவது, ‘இதழியல் கலை, அன்றும் - இன்றும்’ என்ற இந்த நூலைப் படித்துப் பாருங்கள்!

வாசகர் பெருமக்கள் தங்களது நிறைவுக் கருத்துக்களை எனக்கு எழுதியனுப்பினால், நான் எனது குறைவை நீக்கி, அடுத்த பதிப்பில் திருத்தி, சேர்த்துக் கொள்கின்றேன். நன்றி,


அன்பன்
என்.வி. கலைமணி