பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

விடுதலைப் போரில் தமிழ் பத்திரிகைகள்




அத்தகைய ஒரு தேசியக் கொள்கைக் குலத் திலகமான சுப்பிரமணிய சிவா, 1913-ஆம் ஆண்டில், ‘ஞானபானு’ என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து ஆங்கிலேயே ஆதிக்க மலையைத் தவிடுபொடியாகச் சிதற வைக்கும் சிற்றுளியாக விளங்கி நடத்தினார் பத்திரிகையை!

‘ஞானபானு’ பத்திரிகை ஓர் இலக்கிய ஏடாகவும், அதே நேரத்தில் தமிழ்ப் பற்றுடைய கூர் அம்பாகவும், ஆங்கிலேயர்களது ஆணவ ஆட்சியை எதிர்க்கும் கள வாளாகவும் காட்சி தந்தது.

அடிமை தூக்கத்தில் ஆழ்ந்து உறங்கும் கும்பகர்ண தமிழ்ச் சாதியின் பலரைத் தனது வீரமிக்க எழுத்துக்களது அறிவுணர்ச்சிகளால் தட்டி எழுப்பி, அவர்களது ஊக்கத்திற்கும், நோக்கத்திற்கும் ஆக்கமூட்டும் பத்திரிகையாகவும் ஞானபானு தமிழ்நாட்டை வலம் வந்தது.

திரு.வி.க. ‘நவசக்தி’

‘தேசபக்தன்’ இதழ்கள்

தமிழ் , இங்லீஷ் மொழிகளில் பெரும் புலமை பெற்றிருந்தவரான தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், 1917-ஆம் ஆண்டில் ‘தேச பக்தன்’ என்ற காங்கிரஸ் இயக்க நாளேட்டின் ஆசிரியுர் பொறுப்பில் இருந்து விலகி, ‘நவசக்தி’ என்ற தின இதழை 1920-ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்.

திரு.வி.க. அவர்கள் ‘தேச பக்தன்’ என்ற நாளேட்டை விட்டு விலகியதும், பாரிஸ்டர் வ.வே.சு. ஐயர், தேசபக்தன் தினசரி பத்திரிகையின் ஆசிரியராக அமர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியின் கொடுமைகளை மக்களுக்கு விளக்கினார்.

தென்றல் நடைத்தமிழ் எழுத்தாளரான திரு.வி.க. அவர்கள் ‘நவசக்தி’ வார இதழை ஏறக்குறைய இருபதாண்டுகள் திறம்பட கடத்தித் தேசியக் காங்கிரஸ் கட்சிக் கொள்கைளுக்கு ஒரு பிதாமகன் பீஷ்மராக விளங்கினார்.

திரு.வி.க. நவசக்தி பத்திரிகையில் துணை ஆசிரியராக அப்போது பணியாற்றியவர். தற்போதைய ‘கல்கி’ என்ற