பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6
சுதந்திர இயக்கத்தில்
இருபதாம் நூற்றாண்டு இதழ்கள்

ந்திய விடுதலை இயக்கம் மக்களிடையே பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இந்தியா முழுவதுமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சரியாகப் பரவாமல் இருந்ததற்குக் காரணம், பத்திரிகை பலம் பெருகாததின் விளைவே ஆகும்.

கங்காதர் பட்டாச்சாரியார், இராஜராம் மோகன்ராய், ஜேம்ஸ் சில்க் பக்கிங்ஹாம், ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி போன்ற ஒரு சிலரின் பத்திரிகைகள் மட்டுமே அப்போது தோன்றின.

அவற்றில் கூட பிரிட்டிஷ் ஆட்சியரின் ஒழுக்கக் கேடுகளை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளே அதிகமாக வெளிவந்தன. அதனால், அகில இந்திய தேசியக் காங்கிரசின் முற்போக்குக் கொள்கைகள் மக்கள் இடையே நன்றாக வேறூன்றாமல் இருந்தன.

இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கம் 1885-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட பிறகு, அதன் தலைவர்கள் நகர்தோறும் பேரவை மாநாடுகளைப் போன்ற அகில இந்தியக் கூட்டங்களை நடத்தி, பிரிட்டிஷ் ஆட்சியிடம் கோரிக்கை மனுக்களைக் கொடுக்கும் பணிகளே அவர்களுக்குச் சரியாக இருந்தது.