பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


 ‘மாலை மணி’

நாளேடு

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கென்று ஒரு நாளேடு இல்லையே என்ற அறிஞர் அண்ணாவின் குறையை, சுயமரியாதை வீரர் டி.எம். பார்த்தசாரதி நிறைவுப்படுத்தினார். அவர் சென்னை மண்ணடி முத்துமாரி செட்டித் தெரு என்ற முகவரியிலிருந்து ‘மாலை மணி’ என்ற நாளேட்டைத் துவக்கினார். அதற்கு ஆசிரியர் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கே.ஜி. இராதாமணாளன் ஆகியோராவர்.

அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு நாவலர் நெடுஞ்செழியன் அதற்கு ஆசிரியரானார். அவருக்குப் பிறகு, கே.ஜி. இராதாமணாளன் ஆசிரியரானார். இறுதியில் நட்டக் கணக்கு அதிகமாகவே மாலை மணி நின்றது.

பி.எஸ். இளங்கோ

‘மாலை மணி’

சில ஆண்டுகள் கழித்துக் கழகத்தோர் பி.எஸ். இளங்கோ என்பவர் ‘மாலை மணி’யை வார இதழாக அரசு அனுமதி பெற்று நடத்தினார். அந்தப் பத்திரிகைக்கு எந்தச் செய்தியும் தேவை யில்லை; அவசியமில்லை; பிறகு எப்படி அந்த ஏடு வெளியானது?

மாலை மணி 1 x 4 என்ற டெம்மி சைஸ் அளவில் 16 பக்கங்களைக் கொண்ட பத்திரிகையாகும். அன்றுவரை, ஏன் இன்று வரையிலும்கூட, அத்தகைய ஓர் அதிசயப் பத்திரிகை வெளிவந்தது கிடையாது. இனிமேலும் அப்படிப்பட்ட பத்திரிகை ஒன்று வெளிவரும் அளவுக்கு ‘நா’ வன்மைப் படைத்தோர் எவருமில்லை; என்ன அந்த அதிசயம் என்று கேட்கிறீர்களா?

16 பக்கமும் ஒரே

ஒரு பேச்சுதான்!

அது, பதினாறு பக்கங்களை உடைய ஒரு வாரப் பத்திரிகை. அறிஞர் அண்ணா அவர்களின் ஒரே ஒரு பேச்சை