பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

179



ஈரோடு சின்னசாமி

‘சமநீதி’ வார இதழ்

சோசலிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுத் தூண்களிலே ஒருவராகத் திகழ்ந்தவர் ஈரோடு மு. சின்னசாமி. அவர் மொடக்குறிச்சி ஊரர்! அருமையான, இயற்கை ஆற்றல்மிக்க, எதிலும் விரைவான செயற்திறமையுடைய, உரமிக்க, கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் அற்புத அன்பு சக்தியுடைய தீப்பொறி பறக்கும் அரசியல் பேச்சாளர் ஆவார்.

கலைஞர் அரசியல் பற்றுடைய அந்த சோசலிஸ்ட் தலைவர்; சி.பா. ஆதித்தனார் சோசலிஸ்ட் கட்சியில் இருந்தபோது இருவரும் நண்பர்களானார்கள்.

‘தினந்தந்தி’ பத்திரிகையின் நிறுவனரான சி.பா. ஆதித்தனார், நாம் தமிழர் இயக்கம் என்ற ஒரு சுதந்தரத் தமிழ்நாடு பெறும் ஆர்வமுடையக் கட்சியை உருவாக்கிய போது, ஈரோடு சின்னசாமி அந்த இயக்கத்திற்குச் சக்தியூட்டும் தலைமைப் பேச்சாளர்களுள் ஒருவராக்கப்பட்டார். இருவருக்கும் கொள்கை முரண்பாடு உண்டானதால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பரிந்துரையை ஏற்று தி.மு.க. பேச்சாளரானார்.

‘சமநீதி’ என்ற வாரப் பத்திரிகையை ஈரோடு சின்னசாமி நடத்தினார். அந்த பத்திரிகையைப் பொறுப்பேற்று நடத்தும் பொறுப்பை சோசலிஸ்ட் கட்சியின் எழுத்தாளராக இருந்த அரிய திறமையாளரான ஆர். சீனிவாசமூர்த்தி என்ற திருமாறனிடம் அவர் ஒப்படைத்தார்.

‘சமநீதி’ என்ற அந்த ஏடு மக்கள் திலகம் அணியானது. அதன் சார்பாக ஈரோடு சின்னசாமி, ஈரோடு சட்டமன்ற உறுப்பினரானார். அவர் நடத்திய சமநீதி என்ற பத்திரிகையை பிறகு எம்.ஜி.ஆர். உரிமை ஏற்று நடத்தினார்.

‘புதிய பூமி’ நாளேடு;

நாஞ்சில் மணிமாறன்!

‘மனோன்மணியம்’ என்ற காப்பிய நாடகத்தை எழுதிய பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, தனது நாடக