பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

187


வேண்டும் என்று அவர் உரையாற்றினார். அவர் ஆங்கிலத்தில் உரையாற்றிய கருத்தின் சாரம் இது :

‘மருத்துவத் தொழிலில் நன்முறையில் வகுக்கப்பட்ட சில நன்னெறிகள் உள்ளன என்பதை உலகம் அறியும். அவற்றை ஒழுங்குப்படுத்த மருத்துவக் குழு (Medical Council) ஒன்றுள்ளது. மருத்துவர்கள் தங்கள் நடைமுறிையில் அந்த நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதைப் பார்ப்பதும், அந்தக் குழுவின் பணியாகும்’

‘இதைப் போன்றே வழக்கறிஞர் தொழிலிலும் சில நெறிமுறைகள் உள்ளன. கற்றறிந்தோர் தொழிலானர் பத்திரிகைத் தொழிலுக்கு (Journatism) அத்தகைய நெறிமுறைகளை வகுப்பதற்கான காலம் வந்து விட்டது என எதிர்ப்பார்ப்பது தவறா?”

“பத்திரிகைத் தொழிலில் ஈடுப்பட்டுள்ள என் நண்பர்கள் இப்பொழுது சங்கங்கள் அமைத்துச் செயல்படுகிறார்கள். அதற்கு மேலும் அவர்கள் சற்று உயர்ந்து சென்று தங்களுக்கெனச் சில நெறிமுறைகளை வகுத்துக் கொள்வது இயலாத காரியமா? எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டார்...’ சர்.ஏ.ஆர். முதலியார்.

‘நன்முறையில் கற்றுத் தேர்ந்த, பண்பாடும் பரந்த நோக்கமுமுடைய பத்திரிகையாளர்கள் குழாம் ஒரு நிறுவனத்தை அமைத்து அதன் மூலம் தங்களின் நடத்தையை ஒழுங்குப்படுத்திக் கொள்ள இயலும் என நான் நம்புகிறேன்’. - என்று டாக்டர் சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்கள் தனது ஜெனிவா சொற்பொழிவின் இறுதியில், தான் ஒரு சமாதானத் தூதர் என்பதை விளக்கினார்.

“போர் தவிர்க்க இயலாது என நான் நம்புவதற்கில்லை. மனிதனின் பொது அறிவு போரை அனுமதிக்காது. இத்தகைய மாநாடு போர் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்” என்ற கருத்தையும் ஏ.ஆர். முதலியார் அந்த மாநாட்டில் வலியுறுத்தி முழக்கமிட்டார்.

(- டாக்டர் ஏ.இராமசாமி முதலியார் ஜெனிவா மாநாட்டின் பேச்சு - “இணையிலா இரட்டையர் வாழ்க்கை வரலாறு” என்ற நூலில்)