பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்



சென்னை மாநகரில் இன்றும் காட்சி தந்து கொண்டிருக்கும் மவுண்ட் ரோடு (அண்ணா சாலை) அண்ணா சிலையை யார் திறப்பது என்று சர்ச்சை ஏற்பட்டபோது, அறிஞர் அண்ணா அந்த சிலையை டாக்டர் சர்.ஏ. இராமசாமி தான் திறக்க வேண்டும் என்றார். அறிஞர் அண்ணா சிலையை சர்.ஏ.ஆர். முதலியார் திறந்து வைத்து, அண்ணாவின் தனித் திறமைகளை, அரிய பண்புகளைப் பாராட்டிப் பேசிய காட்சியை இலட்சக்கணக்கான மக்கள் கண்டு, கேட்டு மகிழ்ச்சிப் பெற்றார்கள். ஒரு பத்திரிகையாளர் சிலையை, மற்றொரு பத்திரிகையாளர் திறந்து வைத்தக் காட்சியை இலட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தார்கள்.