பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

195



பொதுஉடைமை

கட்சி “தீக்கதிர்”!

‘தீக்கதிர்’ என்ற கம்யூனிஸ்ட் கட்சி நாளேடு, பாட்டாளி மக்கள்; தொழிலாளர் தோழர்கள்தம் வாழ்க்கைக்குரிய நலன்களுக்காகத் தீச்சுடரொளிகளை ஆதிக்கவாதிகள் மீது உமிழ்ந்து உழைத்து வெற்றி கண்டு வரும் பொதுவுடைமை ஏடாக பவனி வருகிறது. அதன் ஆசிரியர் அகத்திலிங்கம் பன்னூலுணர்ந்த புலமையாளர் மட்டுமல்ல; அரசியல், இலக்கியம், வரலாறு ஆய்வுக் கருத்துக்களைக் கட்டுரைகள் வாயிலாக அள்ளியள்ளி வழங்கும் அறிவு தாதா! மார்க்ஸ் மரபாளர்! ஜீவாவின் வாழையடி வாழையாக வந்த பத்திரிகை வாரிசு! சிறந்த பொதுவுடைமைக் கருத்துக்களை ‘தீக்கதிர்’ மூலமாகக் கொள்கை ஒளியேற்றி வழிகாட்டும் பண்பாளர் அவர்!

வருமானம் திரட்டும்

பத்திரிகை வகைகள்!

“குமுதம், குங்குமம், வண்ணத் திரை, முத்தாரம், அமுதசுரபி, கலைமகள், கல்கி, விகடன்” போன்ற பருவ இதழ்கள், பிறர் எழுத்தில் வாழும் பத்திரிகைகள். தனி மனித பல்சுவை விருந்தாற்றல் இந்தப் பத்திரிகைகளுக்கு இல்லாவிட்டாலும், பெண்கள் தலை அழுக்கில் உயிர் வாழும் பேன்களைப் பெருமாளாக்கி, அவைகட்கு விழாக்கள் எடுத்து உயிர் வாழும் பணம் திரட்டிகள்; கூடுமானவரை ஓரினத்திற்காகவே கதை திரட்டிகள்; எப்படியாவது வருமானம் வந்தால் போதும் என்பதற்காகவே சினிமா நடிகைகளை நம்பி வாழ்ந்து வரும் பத்திரிகைகள். பருவ ஏடுகளது பெண்ணாள்களைப் பற்றிப் பாவேந்தர் பாரதிதாசன் “பத்திரிகை” என்ற தலைப்பில் பாடிய ஒரு பகுதி இது. படித்துப் பாருங்கள்!

“சிறுகதை ஒன்று சொல்லிப்
பெருமதி யூட்டும் தாளே!
அறைதனில் நடந்த வற்றை
அம்பலத் திழுத்துப் போட்டுக்