பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

225



அச்சடித்த பத்திரிகைப் பிரதி ஒன்றை பத்திரிகை உரிமையாளர் அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். அதிகாரிகள் அளிக்கும் தண்டனையை எதிர்த்துப் பத்திரிகையாளர் நீதிமன்ற விசாரணைக்குப் போக முடியாது. இந்தக் கடுமையான அடக்குமுறைச் சட்டத்தை பத்திரிகையாளர்கள் மீதும், குறிப்பாக அதன் ஆசிரியர்கள் மேலும் ஏவி விட்டது ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சி!

இந்த அதிகாரக் கெடுபிடிகளால் முன் ஜாமீன் தொகையைக் கட்ட முடியாத பத்திரிகைகள் எல்லாம் நின்றுவிட்டன. இன்றைக்கு பாண்டிச்சேரியில் நடக்கின்றதே அரவிந்தர் ஆஸ்ரமம், அதன் உரிமையாளரான அரவிந்த கோஷ் தனது ‘பந்தே மாதரம்’ பத்திரிகையை உடனே நிறுத்திவிட்டு, பத்திரிகைத் துறையில் பிரிட்டிஷ்காரர்கள் அதிகாரப் பேயாட்டங்களைப் பொறுக்க முடியாமல், அரசியலை விட்டே ஓடி வந்தார்.

பிரெஞ்சு ஆட்சி நடக்கும் பாண்டிச்சேரி நகருக்குள் சந்நியாசியாக நுழைந்து ஆன்மீகவாதியாக மாறிய அவர், ஆஸ்ரமம் நடத்த ஆரம்பித்துவிட்டார்! அவ்வளவுக் கொடுமைகளை அந்தச் சட்டம் பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தது!

இவ்வளவு அதிகாரக் குத்தலையும், குடைச்சலையும் கொடுத்துக் கொண்டிருந்த அந்தச் சட்டக் கொடூரத்தைக் கண்ட அதே ஆட்சி, 1921-ஆம் ஆண்டில் - அதாவது பதினோறு ஆண்டுகளுக்குப் பிறகு, சர் தேஜ் பகதூர் சாப்ரூ என்பவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அதன் சாதக பாதகங்களின் பரிந்துரைகளைக் கேட்டு, 1910-ஆம் ஆண்டின் பத்திரிகைச் சட்டத்தை ஆங்கில அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.

12. 1930-ல் இயற்றப்பட்ட
செய்தித்தாள் - அவசரச் சட்டம்

பத்திரிகையாளர்கள் 1921-ஆம் ஆண்டு முதல் 1930 - வரை, சற்று நிம்மதியான சிந்தனைகளோடு தொழிலை வளர்த்து