பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

227


இயக்கம் நடக்கும் என்று அறிவித்ததால், போராட்டமும் நடந்து கொண்டிருந்தது.

நாடு பொங்குமாங்கடலானது. மக்கள் சுனாமி அலைகளென ஆங்காங்கே கொந்தளித்துப் போராடினார்கள்.

மக்கள் அறப்போராட்டத்தின் உணர்ச்சிகளைப் படம்பிடித்துக் காட்டிய பத்திரிகைகள் மீது, ஏகாதிபத்திய ஆட்சி 1931-ஆம் ஆண்டில் இயற்றிய சட்டத்தைப் பத்திரிகையாளர்கள் மீது ஏவியது. என்ன அந்தச் சட்டத்தின் கொடுமை என்கிறீர்களா?

வேறொன்றுமில்லை; பத்திரிகைகள் 2000 ரூபாயை முன் ஜாமீனாக ஏற்கனவே கட்டி வந்த நிலையை மாற்றி, இப்போது 10,000 ரூபாயைப் பிணையத் தொகையாகக் கட்ட வேண்டுமென கட்டளையிட்டது. பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல; எந்த அச்சகம் அந்தப் பத்திரிகையை அச்சடிக்கின்றதோ, அந்த அச்சகத்தாரும் 10,000 ரூபாயைப் பிணையத் தொகையாகக் கட்ட வேண்டும் என்பது அச்சட்டத்தின் முதுகெலும்பு நோக்கமாகும்.

இவற்றுக்கெல்லாம் மேலான வேறோர் கொடுமை என்ன தெரியுமோ?

அச்சகமும், பத்திரிகை உரிமையாளரும் கட்டிய பிணையத் தொகைகளை, மாநில அரசுகளே கபளீகரம் செய்து கொள்ளும் அதிகாரமும் உடையது அந்தச் சட்டம்? எப்படி நெருக்கடிச் சட்டம்? அதன் கொடுமை?

14. 1932 - ல், மற்ற நாடுகளின்
வெளி உறவு முறைச் சட்டம்
(FOREIGN REGULATION ACT 1932)

உலகப் பேரரசு என்றால், போர்க் கால நடவடிக்கைகளை அடிக்கடி சந்திக்கும் சூழ்நிலைகள் அதற்கு உருவாவதுண்டு. 1914-ஆம் ஆண்டில் உலக முதல் போர் ஆரம்பமாகி, 1918-ல் முடிந்தபோது, உறவு நாடுகள் - பகை நாடுகள் என்ற அணிகள் உருவாயின.