பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

ஆறு நாடுகளின் உருவாக்கமே நமது குடியரசு சட்ட அமைப்பு



அதிலும் குறிப்பாக, ஐரோப்பா கண்டம் என்றாலே, எப்போது பார்த்தாலும் - தமிழ்நாட்டு மூவேந்தர்களைப் போல எங்காவது ஒரு மூளையில் போரொலி கேட்டுக் கொண்டே இருக்கும் கண்டம் அது! இங்கிலாந்து நாட்டுக்குக்கும் அதில் பங்குண்டு என்பது உலக வரலாறு.

அதற்கேற்ப, கிரேட் பிரிட்டனுக்கும் நட்புறவு நாடுகள், பண்டைய நாடுகள், பகை நாடுகள் ஆகிய அணிகள் உண்டாகலாமல்லவா? அதனால், அவற்றுக்கு எதிராக இந்தியப் பத்திரிகைகள் பத்திரிகை மூலம் எந்தவிதக் கருத்தையும் கூறிட வாயைத் திறக்கக் கூடாது.

வெளிநாடுகளின் உறவு இருக்கும்வரை எந்த ஒரு செய்தியினையும் ஆதரித்தோ - எதிர்த்தோ பத்திரிகைகளில் எழுதக் கூடாது என்பதற்காகவே கொண்டு வரப்பட்ட சட்டம் இது.

15. 1934-ல் வெளி வந்த இந்திய
அரசின் பாதுகாப்புச் சட்டம்

இந்தச் சட்டம் இந்தியாவிலே உள்ள சிற்றரசுகளைச் செய்தித்தாள்கள் தாக்கி எழுதக் கூடாது என்று பத்திரிகையாளர்களது பேனாமுனைகளுக்குத் தடை விதிக்கப்பட்ட சட்டம் இது. ஏனென்றால், சிற்றரசுகள் எல்லாம் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு தரும் சூழ்நிலைகள் அமைந்துவிடக் கூடாதல்லவா? அதனால்!