பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

பத்திரிக்கைகளைப் பாதுகாக்கும் ஃபெரோஸ் காந்தி சட்டம்!



பத்திரிகைகளில் வேலைசெய்பவர்களுக்குரிய சம்பளம், சேமிப்பு நிதி, வேலை செய்யும் நேரம், அவர்களுக்கான விடுமுறை காலம் போன்றவற்றை மேற்கண்ட சட்டம் எல்லையிடுகிறது. பத்திரிகையாளர் என்றால் யார்? என்ற விவரத்தையும் இந்தச் சட்டம் கூறுகின்றது.

பத்திரிகைகளில் பணிபுரிகின்ற அதன் ஆசிரியர்கள், துணையாசிரியர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் ஒரு வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே வேலை செய்யவேண்டும். ஏழாவது நாள் அவர்களுக்கு விடுப்பு கொடுக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு பத்திரிகையாளர்கள் ஆறு மணி நேரம் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும். அதாவது வாரத்திற்கு 36 மணி நேரம் என்றும், மாதத்திற்கு 144 மணி நேரம் என்றும் அவர்களுக்கு வேலைநேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

செய்தி சேகரிப்போர்
(Reporters)

செய்தி சேகரிப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரே வேலையைத்தான் (Assignment) செய்யவேண்டும். அவர்கள் ஒரு நாளில் இரண்டு விதமான வேலைகளைச் செய்ய அவசியம் வந்தால், மறுநாள் அவர்கள் வேலைசெய்ய வேண்டியதில்லை.

சம்பளக் குழு:

குறிப்பிட்டக் கால இடைவெளியில் பத்திரிகையாளர்களின் சம்பளங்களை வரையறுப்பதற்காக சம்பளக் குழுவை நியமிக்க இந்தச் சட்டம் உரிமை தருகின்றது. இந்த நிலைக்கேற்றவாறு பத்திரிகையாளர்கள் மாறுகின்ற கால, வேலை சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி உயர்ந்த ஊதியம் பெறலாம்.

11. நினைவில் நிறுத்த
வேண்டிய சட்டங்கள்

மேலே கூறப்பட்ட பத்திரிகைச் சட்டங்கள் இல்லாமல், பத்திரிகை நடத்துவோர் அவசியம் நினைவில் நிறுத்தக் கூடிய சில முக்கியமான சட்டங்களைக் கீழே விளக்கியுள்ளோம். கவனம்கொள்வது நல்லது.