பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

263



கூட்டம் குழப்பத்தில் முடியும் நிலையில்; கூட்டத்தில் உணர்ச்சி கொந்தளிக்கவே, தலைவரே நன்றி கூறிவிட்டார்; கூட்டமும் கலைந்தது.

ஏன் இதை இங்கே சுட்டிக் காட்டினோம் என்றால், பெருந்தலைவர் காமராஜர் தனது பொது வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் விருதுநகர் நகராட்சித் தேர்தலிலே வேட்பாளராகப் போட்டியிட முயன்றபோது, விருது நகர் காங்கிரஸ் கட்சிச் செயற்குழுவில் “காமராஜ் நகர சபை தேர்தலிலே நிற்கலாமா? வேண்டாமா?” என்று கருத்துக் கேட்கப்பட்டது. யாரும் எதிர்ப்புக் கூறாமல் நிற்கலாம் என்ற முடிவு உருவாயிற்று. அதனால் காமராஜர் வேட்பாளரானார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒருவர் வாக்களிக்க வேண்டுமானால், அவர் கல்வித் துறையில் பல்கலைக் கழகம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது நகராட்சிக்கு வரி கட்டக் கூடிய ஏதாவது சொத்து, இருக்க வேண்டும் என்பவை தேர்தல் விதிகளாகும்.

வேட்பாளர் காமராஜர் பெயரில் வரிகட்டக் கூடிய அளவுக்கு வீடோ, நிலமோ எதுவும் கிடையாது. அதனால் ஆட்சிக்கு வரிகட்டக் கூடிய நிலையில் அப்போது காமராஜ் இல்லாததால், அவர் நகராட்சித் தேர்தலிலே கவுன்சிலராகப் போட்டியிடும் தகுதியில்லை.

காமராஜருக்கும், பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கும் நண்பராக இருந்த விருதுநகர் சுப்பையா ஆசாரி என்பவர், உடனே பசும்பொன் கிராமம் சென்று காமராசரின் இக்கட்டான நிலையை உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார். காங்கிரஸ்காரரான முத்துராமலிங்கத் தேவர் உடனே எட்டு ரூபாயை அந்த ஆசாரியிடம் கொடுத்து, ஓர் ஆடு ஒன்றைக் காமராஜ் பெயருக்கு விலைக்கு வாங்கச் சொல்லி, அதைக் கால் நடைச் சொத்தாக்கி, அரசுக்கு வரிகட்டி, காமராசர் வேட்பாளராக நின்று வெற்றிபெற்று, நகரமன்ற உறுப்பினரானார்.

அதனைப் போல, ‘சோ’வும் பத்திரிகை நடத்தலாமா? என்ற கேள்வியை எழுப்பி, பத்திரிகை நடத்த, பல்கலைக் கழகப்