பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

267



பத்திரிகைப் பெயரைக் குறிப்பிட்டீர்கள் அல்லவா? அத்துடன் மேலும் மூன்று பெயர்களை அதே மனுவில் குறிப்பிட வேண்டும். ஏன் தெரியுமா?

நீங்கள் குறிப்பிடும் பெயரில் வேறு எவராவது பத்திரிகை நடத்தும் உரிமையை நீதிமன்றத்தில் உங்களுக்கு முன்னே பெற்றிருக்கக் கூடும். அதனால் நீங்கள் பத்திரிகைக்கு வைத்துள்ள பெயரில் உங்களுக்கு நடத்தும் உரிமை கிடைக்காது.

தனியாக வேறு மூன்று பெயர்களைக் குறிப்பிட்டிருந்தீர்கள் அல்லவா? அந்தப் பெயர்களில் எவரும் நீதிமன்ற உரிமை பெறாதிருந்தால் அவற்றுள் இரண்டாவதாக நீங்கள் குறிப்பிட்ட பெயருக்கு உரிமை கிடைக்கும்.

எந்த பெயர்களுக்கும் உரிமை கிடைக்கவில்லை என்றால், அந்தப் பெயர்களில் பத்திரிகை நடத்தும் உரிமைகளை எவரோ ஏற்கனவே பெற்றுவிட்டார்கள் என்று பொருள். அதனால், விண்ணப்பித்த உங்களுக்கு உரிமை கிடைக்கவில்லை என்று உணர வேண்டும்.

பத்திரிகை நடத்தும் அனுமதியை நீதிபதியிடமிருந்து பெற்றுவிட்டால், பிறகு நீங்கள் பத்திரிகையாளராகப் பதிவு செய்யப்பட்டு விட்டதாகப் பொருள்.

பத்திரிகை உரிமை
பெற்றாகி விட்டதா?

பத்திரிகை நடத்த நீதிபதி அனுமதி பெற்ற பின்பு உடனடியாக ஆறு வாரத்திற்குள் அதைத் துவக்கிவிட வேண்டும். மாத இதழாக இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அதை ஆரம்பித்துவிட வேண்டும்.

மேலே கூறிய கால எல்லைக்குள் பத்திரிகையை நடத்தா விட்டால், அதற்கு நீதிபதி வழங்கிய அனுமதி தானாகவே செத்துவிடும். பிறகு, மறுபடியும் நீதிமன்றத்திற்கு மனு செய்து உயிர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலை வரும். Renewal என்று அதற்குப் பெயர்.