பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

269



அஞ்சலகச் சலுகை
பெறுவது எப்படி?

பத்திரிகை அச்சடித்து வெளிவந்த உடனே கடைசி பக்கத்தின் உச்சி முனையில் Regd. என்று ஆங்கிலத்தில் அச்சிட்டு; அருகே இடம் காலியாக இருக்கும் இடத்தில் டில்லி பத்திரிகைப் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட ரிஜிஸ்டர்டு நெம்பரை அதாவது பதிவு எண்ணை அச்சடிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக (Regd. No.5454), பதிவு எண் 5454 என்பதைப் போல அச்சிட்டிருக்க வேண்டும். அவ்வாறு அச்சடித்தால்தான் பத்திரிகையை வெளியூர்களுக்கு அனுப்பிவைக்கும் மத்திய அரசின் அஞ்சல் சலுகை வசதி கிடைக்கும்.

அஞ்சல் சலுகை பெற வேண்டுமானால், எந்த நீதிமன்றத்தில் பத்திரிகை நடத்திட அனுமதி பெற்றோமோ, அந்த அனுமதி நகலுடன் பத்திரிகைப் பிரதி இரண்டு இணைத்து, வெளியூர்களிலே பத்திரிகை விற்பனையாகின்றதா சந்தா வாசகர்கள் இருக்கிறார்களா? என்பதை அஞ்சலகத்தினர் சோதித்துப் பார்ப்பதற்காக 50 சந்தா வாசகர்களது முகவரிகளை இணைத்து, அஞ்சலக அஞ்சல் வசதி உதவி தேவை என்று பத்திரிகை Letter Paperரிலே எழுதி, பத்திரிகை வெளிவரும் எல்லைக்குட்பட்ட பெரிய அஞ்சலதிகாரி யார் என்பதை விசாரித்து, மேற்கூறிய விவரங்களை அந்த Post Office அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

பத்திரிகை அலுவலகத்தினர் கொடுத்துள்ள 50 சந்தாதாரர் முகவரிகளில் அஞ்சலக அதிகாரிகள்; பத்து பேர்களுக்காவது அவர்கள் செலவிலேயே அஞ்சலனுப்பி, “நீங்கள் குறிப்பிட்ட பத்திரிகையின் சந்தாதாரரா?” என்று கேள்வி கேட்டு, அதற்கு சந்தாதாரர்கள் பதில் எழுதும் வசதிக்கான ஓர் அஞ்சலுரையை உள்ளே வைத்து அனுப்பிப் பதில் எழுதுமாறு கேட்டார்கள்.

அஞ்சலகத்தார் அனுப்பும் அஞ்சலட்டையை சந்தாதாரர்கள் பெற்றதும், ‘ஆம்’ நான் சந்தாதாரர்தான், எனது