பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

செய்தியாளரும் ஒரு தசாவதானக் கலைஞரே!



எப்படி Reporterரைக் அடையாளம் காண்பது? செய்திகளைப் பரப்புகின்ற வாசகர்களின் எண்ணிக்கையை வைத்து அடையாளம் காணலாம்! அதெப்படி?

நிருபர் கொடுக்கின்ற செய்தி எப்படிப்பட்டதாக இருக்கின்றது? அதனால் மக்களுக்கு உண்டான உண்மை என்ன? நன்மை என்ன? செய்தியாளர் செய்த அறிவுப் பணிகளின் ஆக்கச் செயல்கள்; செய்தியாளர் அந்தச் செய்தியை எந்த வடிவத்தில் வெளியிட்டார்; அவர் பிரசுரித்த செய்தியால் விளைந்த நோக்கம், ஊக்கம், ஆக்கம் என்னென்ன? ஆகிய சில வித்தியாசமான செய்திகளது வெளியீட்டால் அவர் மக்கள் இடையே ஒரு தனி அடையாளமாகக் காணப்படுவார்! அவர் தான் திறமையான செய்தியாளர்!

எனவே, செய்தியாளர்கள் திறமைகளைப் பத்து வகைகளாகப் பிரிக்கலாம். தமிழ்ப் படித்தவர்கள் இந்த உண்மைகளை உணர்வார்கள்.

செய்தியாளர்கள்
அவதானிகளே!

தமிழ்க் கலைகளில் அவதானக் கலை என்பது ஓர் அற்புதக் கலை. அந்தக் கலையிலும் அட்டாவ்தானம், தசாவதானம், சோடசாவதானம், சதாவதானம் என்று பல வகைகள் உண்டு. பொதுவாக, அவதானம் என்றால் என்ன என்பதைத் தெரிவது நல்லது.

அவதானம் என்றால் ஒரு கலையை அல்லது செய்தியைக் கிரகித்தல், சாதுரியம், நிதானம், நினைவு, பாவனை, பின்தொடர்தல், அவதானம் பண்ணல், நினைத்தல், பாடம் பண்ணல், திறமைக்கு வித்தாதல், பண்புகளைப் பெற்று ஒரு சவாலை, காரியத்தைச் செய்து முடித்தல் என்பவையே!

அட்டாவதானம் என்றால் எட்டு வகை அவதானம், தசாவதானம் என்றால் பத்து வகை அவதானம். சோட சாவதானம் என்றால் பதினாறுவகை அவதானம், சதாவதானம் என்றால் நூறு வகை அவதானங்களை மேடையில் மக்கள் முன்பு செய்வதில் வல்லவராக இருக்க வேண்டும்.