பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



19

பத்திரிகைச் செய்திகளை வழங்கும்
உலக, இந்திய அமைப்புகள்

மிழ்நாட்டில் செய்தித்தாளை நடத்துகின்றோம். அமெரிக்கா, இரஷ்யா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நடைபெறும் அன்றாடச் செய்திகளை நாம் இங்கே இருந்து கொண்டே தெரிந்து கொள்கின்றோமே! எப்படி?

தமிழ்நாட்டுக்குள் நாம் செய்தித்தாளை நடத்தும்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டத்திலும், பேரூர் சிற்றுார் க்ளிலும் செய்தியாளர்கள் மூலமாக செய்திகளைப் பெற்றுக் கொள்கிறோம். காரணம், ஒவ்வொரு ஊர்களிலும் நமது பத்திரிக்கைக்காக பணியாற்றும் நிருபர்கள் செய்திகளை அங்கங்கே இருந்து திரட்டி அனுப்புகிறார்கள்.

அந்தச் செய்திகளை நமது பத்திரிகையில் பணியாற்றும் செய்தி ஆசிரியர், துணையாசிரியர் ஒழுங்குபடச் செம்மைப் படுத்தி, உருவாக்குகிறார்கள். அதனால், நாம் நாள்தோறும் நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்ளும் நிலை உருவாகின்றது.

அதனைப் போலவே, இந்திய மாநிலங்களிலும், தலைநகரான புது தில்லியிலும் பண வசதி படைத்த பத்திரிகைகள் செய்தியாளர்களை நியமித்துக் கொண்டு அவர்கள் மூலமாகச் செய்திகளைப் பெற்று, செப்பஞ் செய்து பத்திரிகையில் வெளியிட்டு, பிற மாநில மக்களின் வாழ்வியல் குறை நிறைகளை நமது மக்களுக்கு அறிவிக்கின்றோம். மக்கள்