பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

பத்திரிகைச் செய்திகளை வழங்கும் உலக, இந்திய அமைப்புகள்!



இந்த நிறுவனம் சோவியத் ரஷ்யா அரசின் நேரடி நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. அரசையும், பொதுவுடமைக் கட்சியையும் சார்ந்த நிறுவனமாகும்.

ஏறக்குறைய 110 நாடுகளில் 40 செய்தி திரட்டும் அலுவலகங்களும், 61 தனியார் செய்தியாளர்களும் இந்நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.

இந்தியாவில் இயங்கும்
செய்தி நிறுவனங்கள்

இந்தியப் பத்திரிகை உலகத்திற்கான உலகச் செய்திகளை வழங்குவதற்காக இலண்டன் நகரத்தில் இயங்கி வரும் இராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கிளை 1878-ஆம் ஆண்டில் மும்பை நகரில் துவங்கியது.

ஆனால், Bombay Times என்ற இங்லீஷ் பத்திரிகை 860-ஆம் ஆண்டு முதல் ராய்ட்டர் செய்தி நிறுவனம் இலண்டன் நகரிலுள்ள காலத்திலிருந்தே, உலகச் செய்திகளை அதனிடமிருந்து ‘பம்பாய் டைம்ஸ்’ ஏடு பெற்று வெளியிட்டு வந்தது. பிறகு, ராய்ட்டர் பம்பாய் வந்த பிறகு அதனிடம் நேரடித் தொடர்பு கொண்டது.

திரு. கே.சி.ராய் என்பவர்தான் முதன் முதலில் இந்திய பத்திரிகைகளுக்கான உலகச் செய்திகளை வழங்கும் நிறுவனத்தைத் துவக்கினார். அப்போது பயணியர் (Pioneer) என்ற இங்லீஷ் நாளேடு புகழ் பெற்றிருந்ததோடிராமல், ஆங்கிலேயர் ஆட்சியின் செல்வாக்கோடும், செழித்திருந்தது.

‘பயணியர்’ இதழின் ஆட்சிச் செல்வாக்கைப் பெற்ற ஹென்ஸ்மேன் (Hensman) என்பவரோடு கே.சி.ராய் சேர்ந்து கொண்டு, தொழில் போட்டியைத் துவக்கினார். அதற்குத் துணையாக ஸ்டேட்ஸ்மேன்’( States man) ‘இங்லீஷ்மேன்’ (English man), இந்தியன் டெய்லி நியூஸ் (Indian Daily News) போன்ற பத்திரிகையாளர்களைப் பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டு ‘இந்தியாவின் அசோசியேட்டட்’ (Associated Press of india) என்ற செய்தி நிறுவனத்தைப் பம்பாய் நகரில் துவக்கினார்.

கே.சி.ராய் . அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகச் செயற்பட விரும்பியதை, அவரது கூட்டாளிப்