பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



20


கிரைம் செய்திகள் எவையெவை?
அவை அறமா? சேவையா? ஆபத்தா?


க்கட் சமுதாயத்தில் குற்றம் (கிரைம்) செய்யாத மனிதனே கிடையாது? புராண - வேத சாஸ்திர நெறிகள் எல்லாம் குற்றம் செய்பவனைத் திருத்துவதற்காவே எழுதப் பட்டவை! குற்றம் புரிபவர்களை அசுரர்கள் என்றும், குற்றம் செய்யாதவர்களைச் சுரர்கள் என்றும் அவை குறிப்பிடுகின்றன.

இராவணன், இரண்யன், கம்சன், பத்மாசூரன், பானுகோபன், இந்திரஜித்தன், கும்பகர்ணன் போன்ற எண்ணற்றவர்கள் அசுரர்கள்! இராமன், கிருஷ்ணன், இலட்சுமணன் போன்ற விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் சுரர்களெனச் சுட்டப்படுகிறார்கள்!

எனவே, குற்றம் இழைப்பது என்பது மக்கட் சுபாவம், பண்புகளாக இருக்கின்றன். அதைத் திருத்தி மனிதனாக்குவது நீதிநெறி நூல்களும், அரசு சட்டங்களும்தான் என்பது உலகம் உணர்ந்த உணர்ச்சி வழி வகைகளாகும்.

மன்னிக்கும் பண்புடையவனே மனிதனாவான்; குற்றம் பார்க்கில் சுற்றமில்லை; குற்றங் கடிதல் அரசு அறநெறிகளில் ஒன்று என்ற பண்பார்ந்த நோக்கிலேதான் சட்டங்களை மனிதன் எழுதுகிறான்; அமல்படுத்துகிறான். நீதியை மனித சமுதாயத்தில் நிலைநாட்ட அரும்பாடுபடுகிறான் என்பதற்கு உலக சரித்திரத்தில் எண்ணற்றச் சான்றுகள் இருக்கின்றன.