பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

கிரைம் செய்திகள் எவையெவை? அவை அறமா? சேவையா? ஆபத்தா?



இத்தகையச் குற்றச்சாட்டுகளின் நிகழ்ச்சிகளை மனிதன் படிக்க ஆர்வம் காட்டுவது என்பது என்னமோ உண்மைதான். என்றாலும்; அவற்றை சில பத்திரிகைகள் பணம் பண்ணுகின்ற செய்திகளாகவே பெரிதுபடுத்தி வெளியிடுகின்றன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இலட்சுமி காந்தன் என்பவர் ஒரு பத்திரிகை ஆசிரியன். ‘இந்துநேசன்’ என்ற பத்திரிகையை நடத்தியவரும் ஆசிரியரும் அவரே! அவரைக் கொலை செய்யும் சதி வழக்கில் சினிமா நடிகர்களும் சம்பந்தப்பட்டார்கள் என்பது வழக்கு!

அதனைப் போலவே, ஆளவந்தார் என்ற ஒரு பேனாக் கடைக்காரர் கொலை வழக்கு. அந்த வழக்கும் அக்காலத்ல் பிரபலமாக நடைபெற்றது. அதையும் பத்திரிகைகள் தொடர்ந்து விவரமாக வெளியிட்டன. அந்த வழக்கு விவரங்களையும் மக்கள் தொடர்ந்து ஆர்வத்தோடு விரும்பிப் படித்தார்கள்! பத்திரிகைகளும் பரப்பரப்பாக விற்றன.

இப்போது காவல் துறையினரால் சீரழிக்கப்பட்டதாக ஜெயலட்சுமி என்ற ஒரு பெண்ணின் வழக்கும் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு விவரங்களையும் தற்போது பத்திரிகைகள் பரப்பரப்புடன் வெளியிட்டப்படி உள்ளன.

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் அதன் மேலாளராகப் பணிபுரிந்த சங்கரராமன் என்பவருடைய கொலை வழக்கில், காஞ்சி மடம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அவர்களும், இளைய மடாதிபதி விசயேந்திரர் அவர்களும், அந்தக் கொலை வழக்குச் சதியில் ஈடுப்பட்டிருப்பதாகக் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். அந்த வழக்கின் விவரங்களையும் பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வழக்குச் சம்பவங்களையும் தமிழ் மக்கள் தினந்தோறும் விரும்பிப் படித்துப் பரபரப்படைகின்றார்கள்.

எனவே, பொதுவாகச் சட்டத்திற்கு எதிராகவோ, மீறியோ, புறம்பாகவோ செய்யும் எந்த ஒரு செயலும், சதியும் குற்றம் என்று கூறப்பட்டு அது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் சொல்லுகின்றது.

அதனைப் போலவே, திருட்டு, கொலை, சதி, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து, மோசடி, அதிகாரத்தைத்