பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



23


செய்தியாளர் தவறு செய்தால்
சட்டமன்றமே - நீதிமன்றமாகும்!


ந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு சட்டமன்றங்கள் உண்டு. ஒன்று சட்டப் பேரவை. அதை இங்லீஷில் Legislative Assembly என்பர். இது மக்களால் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களால் நடைபெறுவது. இதற்குச் சட்டப் பேரவை என்று பெயர்.

மற்றொன்று சட்டமன்ற மேலவை. இதன் உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய வாக்குகளால் (Votes) தேர்ந்தெடுக்கப்படுபவர்களாவர். இதனை Legislative Council என்று ஆங்கிலத்தில் கூறுவர்.

தமிழ்நாட்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு முன்பு வரை தொடர்ச்சியாகச் சட்டமன்ற மேலவை இருந்து வந்தது. எம்.ஜி.ஆர். தனது ஆட்சியில் மேலவையைக் கலைத்து விட்டார். இன்று வரை தமிழ்நாட்டில் சட்டமன்ற மேலவை மீண்டும் கொண்டு வரப்படவில்லை. அதனால், சட்டப் பேரவை மட்டுமே இயங்கி வருகின்றது. பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரண்டு பேரவைகளும் இயங்குகின்றன.

இதனைப் போலவே இந்தியாவை ஆட்சி செய்யும் தலைநகரமான புது தில்லியிலும் இரண்டு நாடாளுமன்ற அவைகள் இருக்கின்றன.