பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

செய்தியாளர் தவறு செய்தால் சட்டமன்றமே - நீதிமன்றமாகும்!



அதனால், அந்த உரிமை மீறல் பிரச்னை அந்த மூன்று முறை கால ஆயுளுக்குள் ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டம் முடிந்ததும், அந்தக் குழுவால் அந்தப் பிரச்னை Renewal செய்யப்படவேண்டும். அதாவது அந்தப் பிரச்னை புதுப்பிக்கப்படவேண்டும். அப்போதுதான் அது மீண்டும் விசாராணைக்குரிய ஆயுளைப் பெறும்.

ஆனால், அந்த உரிமை மீறல் பிரச்னையை, சட்டமன்றத் குழு மூன்றாவது முறையிலும் Renewal செய்யாமல் விட்டு விட்டது. அதனால், அந்தக் கட்டுரையாளன், அந்தப் பத்திரிகை உரிமை மீறல் பிரச்னையிலே இருந்து காப்பாற்றப்பட் விட்டதாகக் கேள்வி. அதற்குக் காரணம் யாராக இருக்க முடியும்? முதல் அமைச்சர் கருணைதானே காரணமாக இருக்கும்? எப்படியோ - என்னவோ காரணம். ஆனால் ‘எரியீட்டி’ கட்டுரையாளர் உரிமை மீறல் குற்றத்துக்கு ஆளாகாமல் தப்பித்தார்! அதுதானே முடிவின் முக்கியத்துவம்?

ஏன் இதை இங்கே குறிப்பிட்டேன் என்றால், பத்திரிகையாளன் உரிமை மீறலுக்கு ஆட்படாமல் சட்டமன்ற செய்திகளை எழுத வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டவே குறிப்பிட்டேன்.

இத்தனைக்கும் சட்டமன்றத்தில் நடந்த பிரச்னையைக் கூட அந்தக் கட்டுரை விமர்சனம் செய்யவில்லை. சட்டமன்ற உறுப்பினர் ஒரு பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை பற்றிய விமர்சனம் அது. அதுவும் அந்தப் பிரச்னை அவருடைய சொந்த எண்ணப் பிரச்னை. அதற்கே அவர் சட்டமன்றத்தில் வாதாடினார் என்றால், உரிமை மீறலைப் பெற்றுவிட்டார் என்றால், சட்டமன்றத்தில் நடைபெற்றப் பிரச்னை என்றால் எவ்வளவு எச்சிரிக்கையோடும் ஜாக்கிரதையோடும் எழுத வேண்டும் ஒரு செய்தியாளர் என்பதை, செய்தி சேகரிப்போர்களுக்கு உணர்த்தவே இந்தச் சம்பவத்தை இங்கே சான்று காட்டினேன், அவ்வளவுதான்.

எனவே, எச்சிரிக்கையோடு, ஒரு செய்தியாளர் சட்டமன்ற விவகாரங்களை எழுதத் தவறிவிட்டால், சட்ட மன்றமே, நீதிமன்றமாக மாறி, தண்டனையும் வழங்கலாமல்லவா? எனவே எச்சரிக்கையோடு செய்தியை வெளியிடுவது நல்லது.