பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

சொற்பொருள் உச்சரிப்பை தவறின்றி எழுதலாமே?




(1) ..........
(2) ..........
(3) ..........

(3) தமிழ்நாட்டு வரலாற்றில் சோழர் காலத்தில் [கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் (கம்பர்) 12-ஆம் நூற்றாண்டு வரை] தமிழில் அரிய காப்பியங்கள் தோன்றலாயின.

பத்தியமைத்தல்
(Paragraph)

கட்டுரை முழுவதும் ஒரே துண்டாக எழுதப்பட்டிருக்காது. தொடர்ச்சியாகச் செல்லும் வரிகள். ஆங்காங்கு உடைக்கப்பட்டுக் கட்டுரை பல பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

பல வாக்கியங்கள் சேர்ந்த சிறுசிறு பிரிவுகளாகக் கட்டுரை அமைந்திருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது ஒரே தன்மை வாய்ந்த கருத்துக்கள் விளக்கப்பட்டிருக்கும். இந்த ஒவ்வொரு பிரிவிற்கும் பத்தி (Paragraph) என்று பெயர்.

புதிதாக பாரகிராப் துவங்குவதாக இருந்தால், புதுக் கருத்துத் தொடங்க வேண்டுமானால், அதற்கான இந்தக் குறியீட்டை

போட வேண்டும.

பத்திகள் இல்லாத கட்டுரையில் ஒழுங்காகக் கோவை செய்யப்பட்ட கருத்துக்கள் அமைந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை. பத்திகள் கட்டுரையைப் பார்வைக்கு அழகு செய்கின்றன. படிக்கின்றவருடைய மனத்திற்கும், கண்ணிற்கும் தளர்ச்சி ஏற்படாமல் காக்கின்றன. அதனால் பத்தி பத்தியாகக் கட்டுரையை பிரித்து எழுத வேண்டும்.

எனவே, எழுதும்போது நிறுத்தற் குறிகளை மறந்து விடாமல் இட்டு, பத்திப் பத்தியாக, அழகாக, படிப்பதற்குத் தளர்ச்சி உண்டகாமல் செய்தியாளர்களும், ஆசிரியர்களும் எழுதப் பழகப் பயிற்சி பெறுவது நல்லதல்லவா?