பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
33
பத்திரிகையாளர்களுக்கு
வழிகாட்டி கார்ல் மார்க்ஸ்

(அஞ்சா நெஞ்சக் கட்டுரை)





(ஜெர்மன் நாட்டில் பிறந்தவர் கார்ல் மார்க்ஸ். அவர் ஜெர்மன், ஃபிரெஞ்சு, பெல்ஜியம், இரஷ்சிய நாடுகளில் நடந்த எதேச்சாதிகார ஆட்சிக் கொடுங்கோன்மைகளை எதிர்த்து, அஞ்சாநெஞ்சுடன் பத்திரிகைகளை நடத்தியவர். பத்திரிகை சுதந்தரத்திற்காக மார்க்ஸ் அரும்பாடுபட்டவர். இன்றைய பத்திரிகையாளர்களுக்கு அந்த மேதையினுடைய வைர நெஞ்சுரம் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த அஞ்சா நெஞ்சக் கட்டுரை வரலாற்றை இங்கே வெளியிட்டுள்ளோம். பயன்பெற இது உதவும்.)

- நன்றி : ‘தமிழ்த் தென்றல்’
அக்டோபர், 2004.

சிரியர் என்ற சொல்லை, ஆசு என்றும் இரியர் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். மனதிலே உள்ள ஆசுகளை, குற்றங்களை, இரியர் அதாவது நீக்குபவராதலால் அவரை ஆசிரியர் என்று அழைக்கின்றோம். -

அந்த ஆசிரியர்களிலே இரண்டு வகைகள் உண்டு. ஒன்று ஏட்டைக் கற்பிக்கும் பள்ளி ஆசிரியர். மற்றொன்று நாட்டைக் காட்டி நல்லதை நாட்டும் பத்திரிகை ஆசிரியர்.