380
பாரதியார் தமிழ்ப் பற்று பத்திரியைாளரிடம் மணக்க வேண்டும்
அடிகள் அன்று பாவலரின் பாடல்களுக்கு மதிப்புரை வழங்கும் வாய்ப்பைப் பெறவில்லை. பிறகும்கூட அடிகட்கு அவ்வாய்ப்பு நேரவில்லை.
பாவலர் எழுதியிருந்த பாடல்களை நாவலர் அடிகட்கு சுட்டிக் காட்டியுள்ள பாடல்கள் இவை :
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்”,
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
“பல்விதமாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு”
“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே”
“பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே”
“சாதி மதங்களையும் பாரோம் உயர்சன்மம்
இத்தேசத்தி லெய்தின ராயின்
“வேதிய ராயினும் ஒன்றே அன்றி வேறு
குலத்தவராயினும் ஒன்றே”
“நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த
ஞானம் வந்தபின் நமக்கெது வேண்டும்”
“எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் ஓர்நிறை”
“ஏழையென்றும் அடிமை என்றும் எவனுமில்லை சாதியில்
இழிவு கொண்ட மாந்தர் என்போர் இந்தியாவிலில்லையே”
எனும் பாடல்களின் வரிகளால் பாவலர் பாடல் அமைந்திருந்ததை அடிகள் கேட்டார்.
“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட
மானிடரை நினைந்து விட்டால்”
தமிழையும், தமிழ் இலக்கியங்களையும் இகழ்வாரை நோக்கிப் பாரதியார் தனது பாடலை அடிகட்குப் பாடிக் காட்டினாா.