382
பாரதியார் தமிழ்ப் பற்று பத்திரியைாளரிடம் மணக்க வேண்டும்
“புத்தம்’புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில்லை
சொல்லவுங் கூடுவதில்லை அதைச்
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் -
அந்த மேற்கு மொழிகள் புவியிசை ஓங்கும்”
என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திட லாமோ
சென்றிடுவீர் எட்டுத் திக்குங் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!”
- என்ற பாடலைச் சுப்பிரமணிய பாரதியார் பாடிக் காட்டியதைக் கண்டு - நாவலரும், அடிகளும் மெய் மறந்தார்கள். இந்தத் தமிழ் உணர்ச்சி என்று தமிழிரிடம் எழுச்சி பெறுமோ! என்று, மறைமலை அடிகள் கவிஞர் பாரதியாரை உணர்ச்சி உந்தப் பாராட்டினார்!