பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்


பியூரோக்களை அஞ்சல் செலவுகளுக்காகச் செலவிடும் பரிதாப நிலை ஏற்பட்டது.

வால்போல் என்பவரைப் போலவே, எதிர்கட்சியைச் சேர்ந்த ஹென்றி ஃபீலீடிங் Henry Fielding என்ற பத்திரிகையாளரும் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில்
ஸ்டாம்பு புகார்!

‘ஜெண்டில்மேன்’ “Gentleman” என்ற பத்திரிகையை நடத்தி வந்த ஜான்சன் என்பவர், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அரசியல் வாதங்களை எழுப்பும் உறுப்பினர்களுக்கு இந்த அஞ்சல் குறைபாடுகளைப் பற்றிப் புகார் செய்தார்.

எனவே, 18ம் நூற்றாண்டு முழுவதுமாக, எந்த ஒரு பத்திரிகையும், அபூர்வமாகவே விற்பனையாகி வந்தது-காரணம், 5000 பிரதிகளுக்கு மேல் அவர்களால், விற்பனை செய்ய முடியாத அஞ்சலக வரித் தொல்லைகள் நீடித்ததுதான்.

இந்த நேரத்தில் பத்திரிகைகளை மிக மலிவாக வேகமாக அச்சடிக்கக் கூடிய அச்சு இயந்திர வகைகள் புதுப் புது முறையில் வெளி வந்துக் கொண்டிருந்தன. இந்த இயந்திரம் மூலம் பத்திரிகைகளை அச்சடித்து வழங்கும் வசதிகளை, ஜான் வால்டர் John Walter என்பவர் 1775ம் ஆண்டில், அவர் ஆரம்பித்த The Times என்ற பத்திரிகை மூலமாக மற்றவர்களுக்கும் அந்த வசதிகளைச் செய்து கொடுத்தார்.

கி.பி. 1772ம் ஆண்டில் டேனியல் ஸ்டூவர்ட் Danial Stuart என்பவர் ‘காலை தபால்’ (The Morning Post) என்ற‌ொரு, பத்திரிகையைத் துவக்கி நடத்தினார். அவரது ஏடு பருவ இதழானதால், தனக்கு முன்பு வாழ்ந்த பேரறிவாளர்கள் எழுதி வைத்த இலக்கிய வடிவங்களின் பழைய சிந்தனைகளைத் தனது பத்திரிகையிலே மீண்டும் நினைவுபடுத்தி எழுதி வந்தாா்.