பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

65


பிரெஞ்சு மேயர்
பத்திரிகையாளர்

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் 22.11.1896-ஆம் ஆண்டு பிறந்த ஆண்ட்ரி கைட், Andre Gide, கிரேக்க எழுத்தாளர்கள் படைப்புகளிலே ஒப்புயர்வற்றவராக விளங்கினார்.

ஆண்ட்ரிகைடு மார்ஷ் லேண்ட் என்ற பெயரில் விலங்குகள் தத்துவத்தை ஆராய்ச்சி செய்து எழுதிய நூலில், மனித வாழ்க்கைக்கும் அதைப் பொருந்துமாறு எழுதினார். இவர் 1896-ஆம் ஆண்டில் ரோக்யூ Roque என்ற நகரின் மேயராக இருந்தார். ‘உலகத்தின் பழங்கள்’ Fruits of the Earth என்ற புத்தகத்தை 1897-ஆம் ஆண்டில் எழுதி உலகப் புகழைப் பெற்றார்.

கைடின் எழுத்துக்கள், உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானிகளான ஆல்ப்ர்ட் காமு, Albert Camus ஜீன் பால் சார்த்ரே Jean Paul Sartre போன்ற படைப்பாளிகளை எல்லாம் ஈர்த்தன என்றால், அது மிகை யன்று. Strait is the Gate என்ற அவரது ஆங்கில நூல், ‘லா போர்ட்டே எப்ராய்ட்’ என்ற ஜெர்மன் மொழி நூலானது.

அவரது இந்த ஆங்கில மொழி பெயர்ப்பு நூல், கைட்டுக்கு உலகப் புகழைப் பெற்றளித்தது. அதனால் அந்த பெருமகனுக்கு நோபல் பரிசு நிறுவனம் 1947ம் ஆண்டில் நோபல் பரிசை அளித்துப் பாராட்டியது.

நோபல் பரிசைப் பெற்ற அந்த படைப்பிலக்கிய மேதை, அதற்குப் பிறகும் எழுத்துப் பணியில் சற்றும் ஓயாமல், 1950ம் ஆண்டில் ‘ஜோமல்’ ‘Joumal’ எனும் பெயரில் பத்திரிகையைத் துவக்கினார். அதில் தனது 1889 முதல் 1949ம் ஆண்டு வரையுள்ள தனது வாழ்க்கை நிகழ்ச்சிக்ளைத் தொகுத்து எழுதி அரியதோர் வாழ்வியல் அனுபவங்களைப் புத்தகமாக்கினார். இதைப் படித்த இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் கைட்டுக்கு சிறப்பு டாக்டர் பட்டம் விருதை வழங்கிப் பாராட்டியது.