பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்




பத்திரிகையாளர்
வின்ஸ்டன் சர்ச்சில்

‘The Never sun set in the British Empire’ என்று பிரிட்டிஷ், நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு கிரேட் பிரிட்டன் ராஜ தந்திரிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில் Winston Churchil என்பவர்.

இவர், கிரேட் பிரிட்டன் சாம்ராச்சியத்திற்கு 1940 முதல் 1945 வரையிலும் 1951 முதல் 1955ம் ஆண்டுகள் வரையிலும் இரண்டு முறை பிரதமராக இருந்தவர். செயற்கரிய செயல்களைச் செய்த சிந்தனையாளராகவும், சாதனையாளராகவும் திகழ்ந்த அரசியல், இலக்கிய வித்தகரும் ஆவார்.

சர்ச்சில் 1896-ஆம் ஆண்டு முதல் 1897 வரை இந்தியாவின் வடமேற்கு எல்லைப் பகுதியில் போர்க்களச் செய்திகளைத் திரட்டி அரசுக்கும், பத்திரிகைகளுக்கும் அனுப்பும் நிருபராக பணியாற்றினார். அதனால் அவரை உலகப் பத்திரிகை மன்றம் சிறந்த பத்திரிகையாளர் என்று பாராட்டி விருதும் வழங்கியது.

சர்ச்சிலின் எழுத்துத் திறனைக் கண்ட ‘மார்னிங் போஸ்ட்’ Morning Post எனும் பத்திரிகை, போர்க் கால நேரடி அனுபவங்களைக் கட்டுரை வடிவில் எழுதுமாறு நியமித்தது. ஏற்ற பணிக்கேற்ப, ஒவ்வொரு கட்டுரையிலும், தனது அறிவு முத்திரையைப் பதித்தவர் சர்ச்சில்.

மறுபடியும் ‘இலண்டன் மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகையில் ‘போயர் போர்’ வரலாற்றை தொடர்ந்து எழுதினார். செய்திகளை அவர் திரட்டும்போது போர்க் களத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனைப் பெற்றார்.

சிறையிலே இருந்து சர்ச்சில் தனது தைரியத்தின் தந்திரங்களால் தப்பித்தார். 1900-ஆம் ஆண்டில் அவர் இலண்டன் திரும்பி வந்தபோது பிரிட்டிஷ் அரசு அவரை அரசு மரியாதையுடன் பாராட்டி வரவேற்றது.

இந்தச் சூழ்நிலையில் சர்ச்சில் இலண்டன் நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி