பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

69



அங்கு போர் எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து கொண்டு, ‘காம்பட்’ ‘Combat’ என்ற வேவு அறியும் - துப்புத் துலக்கும் செய்தித் தாளின் ஆசிரியரானார். அதனால், அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த ஆபத்தான சூழலில்தான் காமூ, ‘அன்னியன்’ என்ற நாவலையும் எழுதினார். இந்த நாவல் காமூவை இலக்கியத் தாரகையாக்கிற்று. அவருடைய படைப்புகள் உலகம் முழுவதும் பரவியதுடன், புகழைத் தேடித் தந்தது.

‘காலி கூலா’ (Cali Gula) என்று அவர் 1944-ஆம் ஆண்டில் எழுதிய நாடகம், அவரை நாடக வானிலும், விண்மீனாக ஒளிர வைத்தது.

ருஷ்ய வரலாற்று நிகழ்ச்சிகளை உட்பொருளாக்கி The Just என்ற நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் காமூ புகழை உலகில் நிலை நிறுத்தி விட்டது.

ஆல்பர்ட் காமூவின் இலக்கிய படைப்புகளின் அருமையைக் கண்ட நோபல் நிறுவனம் 1957-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை அவருக்கு வழங்கிப் போற்றியது.

ஜப்பான் பெண்
பத்திரிகையாளர்

மனித வாழ்க்கையைப் புதிய சிந்தனையில், புதிய கோணத்தில் நோக்கி நாவலை எழுதியவர்களில் ஜப்பானிய பெண் எழுத்தாளி ‘யசுநாரி’ கவாபட்டா (Yasu Nari Kawabata) என்பவர் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.

ஜப்பான் டோக்கியோ பல்கலைக் கழகத்தில் கவாபட்டா படித்துக் கொண்டிருந்தபோது ‘ஷன்ஷிக்கோ’ என்ற மாணவர் பத்திரிகையில் கட்டுரை எழுதும் ஆசிரியர் பகுதியில் பணி புரிந்தார். இவரது எழுத்து ஜப்பானிய பிரபல எழுத்தாளரான வின்சிக்குச்சியைக் கவர்ந்தது.

உடனே, அந்த எழுத்தாளர் கவாபட்டாவை அழைத்து, ‘பங்கி ஷுஞ்சு’ என்ற இலக்கிய இதழுக்கு ஆசிரியராகப்