பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

77


பத்திரிகையாளர்களுக்கும் கயமைக் குணம் உண்டல்லவா? அந்த ரகம் அந்த ஹெரால்டு!

எதிர்ப்புகளை ஏறுபோல் சந்தித்த ரைட் சகோதரர்கள் 17.12.1903-ஆம் ஆண்டன்று பத்திரிகை நிருபர்களை அழைத்து, அவர்கள் எதிரிலேயே தங்களது ஆகாய விமானத்தில் ஏறி அமர்ந்துக் கொண்டு வானில் 51 நிமிடங்கள் விமானத்தைப் பறக்க விட்டுக் கீழே இறங்கினர்.

ரைட் சகோதர்களின் இந்த செயற்கரிய செயலின் அற்புதத்தைக் கண்டு, அமெரிக்க பத்திரிகைகள் எல்லாம் புகழ்ந்து பாராட்டின. எனவே, ஒரு பத்திரிகையாளன் விடாமுயற்சியோடு ஒரு செயலில் ஈடுபட்டால், எண்ணியதை எண்ணியாங்கு எய்துவான் என்ற திருவள்ளுவர் பெருமான் வாழ்வியல் சட்டத்திற்கு சான்றாக ரைட் சகோதரர்கள் விளங்கினார்கள்.

நூலாளர்
குறிப்பு :

இதுவரை பத்திரிகை ஆசிரியர்களாக, இணை ஆசிரியர்களாக, கட்டுரையாளர்களாக, கவிஞர்களாக, விமர்சகர்களாக, சீர்திருத்தச் சித்தர்களாக, அரசியல், கலையியல், இலக்கியவியல் போன்றவற்றிலே தன்னிகரற்றவர்களாகப் பத்திரிகைத் துறையில் அற்புதங்களைக் செய்த எழுதுகோலர்களது தொண்டுகளை மட்டுமே படித்தீர்கள்.

காரணம், இந்த நூல் ‘பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டி’ என்ற நூலானதால், பத்திரிகையாளர்களாக, இதழ்களின் கட்டுரையாளர்களாக, நிருபர்களாக பணியாற்றிப் பெருமை பெற்றவர்களது உழைப்பை, திறனை, அஞ்சாநெஞ்ச உணர்வுகளை, அவர்களது செயற்கரிய செய்த மக்கள் தொண்டுகளை மட்டுமே நாம் குறிப்பிட்டிருக்கிறோம்.

இவை அல்லாம்ல், பத்திரிகைகளில் பணியாற்றாமல் எழுத்துலக வட்டத்தில் விண்மீன்களாக ஒளிவிட்டவர்கள் ஏராளம் பேர்; அவ்வளவு அறிஞர் பெருமக்கள் உள்ளனர்.