பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

97


சிற்றூரில் 1772-ஆம் ஆண்டில் தோன்றியவர் இராசாராம் மோகன் ராய். அவருக்கு 14 மொழிகளில் பேரறிவும் புலமையும் இருந்தது.

‘கடவுள் ஒருவரே! பல கடவுள்கள் இல்லை, அவருக்கு உருவம் கொடுத்துக் கொண்டாட வேண்டியதில்லை’ என்று ராய், வங்கப் புலவர்கள் இடையே வாதாடி வாகை சூடியவர். அதற்குக் காரணம், 1786-ஆம் ஆண்டு முதல் காசி மாநகரில் வேதங்களையும், உபநிடதங்களையும் அவர் பயின்று இந்து சமயத்தின் அடிப்படை உண்மைகளை உணர்ந்து கொண்டது தான்.

இராம் மோகனர் இங்லீஷ்காரர்களுடனும், கிறித்துவப் பாதிரிகளுடனும், முஸ்லீம்களுடனும் அமர்ந்து உணவு உண்பதால், அவரை நாத்திகர் என்றும், இந்து மதத்தின் விரோதி என்றும் இந்து பிரமணர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

இராசாராம், இந்து, முஸ்லீம், கிறித்தவ சமயங்களைச் சீர்த்திருத்துவதோடு இராமல், இந்தியப் பத்திரிகைச் சுதந்தர வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். அவர் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகப் பணியிலே இருந்து ஓய்வுப் பெற்றபோது, சமஸ்கிருதம், பாரசீக மொழி, அராபிய மொழி, ஹீப்ரு மொழி, கிரேக்க மொழி, இங்லீஷ் மொழி, வங்கமொழி போன்ற மொழிகளிலே எதைப் பற்றியும் விவாதித்து வாதாடும் வல்லமை பெற்றவராக விளங்கினார்.

கணவன் இறந்த பின்பு அவனுடன் உடன்கட்டை ஏறும் சதி என்ற திட்டத்தை இராசா ராம் எதிர்த்துப் போராடி வந்ததைக் கண்ட அப்போதைய தலைமை ஆளுநராக இருந்த வில்லியம் பென்டிங் பிரபு; உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டத்தை 1829-ஆம் ஆண்டில் கொண்டு வந்து அமல் படுத்தினார்.

இந்து மதத்தில் உருவ வழிபாடுகளைச் செய்யும்போது விலங்குகளை உயிர்ப்பலி கொடுப்பதையும், ஒருவன் பல திருமணங்களைச் செய்து கொள்ளும் பழக்கத்தையும், சாதி முறைகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளையும் தீவிரமாக ஒழித்துக்கட்டத் தனது பத்திரிகை எழுத்துக்கள் மூலமாக அரும்பாடுபட்டார்.