பக்கம்:இதழ்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இதழ்கள்

#24 இதழ்கள் அவன் இருந்த நாளிலிருந்து எனக்கு அவனைத் தெரியுண்டீ! தான் இல்லாட்டா அவன் இல்லைன்னு தெரிஞ்சுக்கோஆமாம், சொல்லிப்பிட்டேன்- என்று கறுவுவார். அவள் அகமுடையான் இருவருக்கும் இடையில் சப்பளம் கொட்டி உட்கார்ந்திருப்பான். கறுப்பு முழி மாத்திரம் இரு வரையும் மாறி மாறி நோக்கும், கடைக்கண் பார்வையில் வெள்ளை முழியில் கடையும். அப்படி அம்மா அசரீரி மாதிரி பேசுகையில் அந்த மனுஷன் யார் பங்கும் எடுத்துக் கொள் ளாமல் பதுங்கிய விலங்குபோல் இருவரையும் மெளனமாய்க் கவனிக்கையில் அவளுக்குப் புரியாத திகிலாயிருக்கும், இன்னும் என்ன இருக்கோ, என்ன வரப்போகிறதோ என்று. ஆமாம், உண்மையில் அவரைப்பற்றி அவளுக்கு என்ன தெரியும்? எப்படியாவது பிறந்த வீட்டை விட்டுக்கிளம்பினால் போதும் என்று வந்து விட்டாள். ஆனால் இப்பொழுதுதான் தெரியறது. பொரியற எண்ணெயிலிருந்து எரியற நெருப்பில் விழுத்து விட்டாள். என்னவோ கொட்டிக் கொட்டிக் குளவி விஷத்தை ஏற்றுமாம், அது மாதிரி அம்மா கறுவிக் கறுவி அவ ளுக்குள் ஏதோ இறுகி இறுகிக் கனத்துக் கொண்டு வருவது போல் தோன்றிற்று. அதை எதிர்த்துக் கேட்டுடலாமா, இதை எதிர்த்துக் கேட்டுடலாமா என்று தோன்றும். ஆனால் அம்மா பரந்து தளர்ந்து செந்தாழை மேனியோடு எங்கோ பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கையில், என்னவோ யாக குண்டத்தில் நின்றெரியும் நெருப்பைப் போல், கிட்ட அண்டக்கூட நெஞ்சு அஞ்சும். அம்மாவுக்கு அது என்ன சக்தியோ? அதன் பேர் தான் தைரிய லட்சுமியோ? அம்மா சாதாரணமாகக் கீழே உட்கார்ந்திருந்தாலும் ஸிம்ஹாஸ்னத் தில் உட்கார்ந்தாப் போலேத்தான் இருக்கு. கரிப்பு என்கிறது என்ன நிறமாயிருக்கும்? கறுப்பா? சிவப்பா? பாம்பு விஷத்தைப் போல் பச்சையாயிருக்குமா? இப்பொழுது களைப்பும் சிந்தனையுமாய் அவள் படுத்தி ருக்கும் அரை உறக்கத்தில் ஒரு கனவு கண்டான். அவளும். அம்மாவும் பாம்புகளாய் மாறிவிட்ட மாதிரி விருத்தது. இரண்டும் எதிருக்கேதிச் தலையை உயரத் துரக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/124&oldid=1247222" இலிருந்து மீள்விக்கப்பட்டது