பக்கம்:இதழ்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

129

இதழ்கள் #29

சுத்த ஆரம்பிபிச்சுடுத்து. ஏதோ தீர்மானத்துக்கு வந்து அம்மா சட்டுனு எழுந்தார். 'அம்பீ-’’ ' என்ன? அவள் கணவன் உள்ளே வந்தான். "நான் ஒரு தீர்மானத்துக்கு வத்துரட்டேன். எல்லோருமா கல்பூரத்தை ஏத்தித் தட்டிடுவோம் எடுக்கல்லேனு. இல்லாட்டா என் மனம் சமாதானமாகாது. பைத்தியம் பிடிச் சுடும் போல் இருக்கு." அம்மாவின் வார்த்தைகளைக் கேட் உதும் மாம்பழத்துள் கத்தி யிறங்குவதுபோல் அடிவயிற் றுள்ளே சில்லிப்பு துண்டமிட்டது. “ஒரு நூறு ரூபாய்க்கு இவ்வளவு ரகளை பண்ணுவது நியாயமாயிருக்கா அம்மா? அப்புறம்-?” 'நியாயம் அநியாயம் எல்லாம் எனக்குத் தெரியுண்டன. எனக்கு அப்புறம், என்னால்தான்நீ பிறந்தே. அதை ஞாபகம் வெச்சுக்கோ! எனக்குக் கத்துக் கொடுக்க வேண்டாம். மனசு வெளிச்சமாயிருக்கறவா எதுக்குமே பயப்பட வேண்டாம். எத்தனை ரூபாயிருந்தாலும் அவாளுக்கு ஒண்ணுதான்-” 'சரி, உன்னிஷ்டம்...” அம்மா கர்ப்பூரத்தை சுவாமி விக்ரஹத்திற்கு எதிரில் ஏற்றிப் பலகையைத் தட்டி ஊதினார். விக்ரஹம் அதிர்ந்து கீழே விழுந்தது. அவள் வயிற்றுள் சுவர் இடித்தது: அடிவயிற்றை அமுக்கிப் பிடித்துக் கொண்டாள். அம்மாவின் கண்கள் திரிகள் மாதிரி எரிந்தன. விக்ரஹத்தை நிமிர்த்தி வைத்துக் கர்ப்பூரத்தை ஏற்றினார். 'ஊம்-ஆகட்டும்-” அடுத்தாற் போல் அவர் தட்டினார்; வயிற்றுள் இன்னும் நாலு கற்கள் இடிந்தன. அவர் தட்டிய தினுசைப் பார்த் தால் இன்னும் எத்தனை முறை தட்டச் சொன்னாலும் அவர் தயார். எப்படியாவது இன்னி ரகளைக்கு முடிவு கட்டினால் சரி. அவளுக்கே அப்படித்தானிருந்தது. ஆனால் சோடாக் கோவிமாதிரி பிதுங்கிய விழிகளுடன் விக்ரஹம் அவன்ைன் பார்க்கையில், அவளுக்கு என்னவென்றே தெரிவில்லை.

  • ஊம்-ஆகட்டும்-'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/129&oldid=1247227" இலிருந்து மீள்விக்கப்பட்டது