பக்கம்:இதழ்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

159

இதழ்கள் 359

&५ κκ «" - ... .o.o.o. yష్టి: பாட்டி சிரித்தாள், பொக்கையோரத்தில் ఫ్ట స్త్రీః வழிந்தது. "அத்தி பூத்தது.டா! உன் அம்மா இல்லையே எ நினைத்துக் கொள்கிறேன்.” பாட்டியை வழி அனுப்பிவிட்டு, குரு அறை: தான். உஷைக்கு இன்னமும் மயக்கம் தெளியவில்லை. கையில் துவண்டு கிடந்தாள். குரு அவளைப் பார்த்துக்

கொண்டே நின்றான். தலையணையின் வென்னையுறை மேன்

3. مي - o, & பதிந்த வெளுத்த முகத்தின் இரு பக்கங்களிலும் அடை தரை ல் கூந்தல் வரம்பு, தளர்ந்து வழிந்தது. இப்பொழுதா? இத்தனை நாள் கழித்தா? எத்தனையோ சாந்தியும் யாத்திரையும் பண்ணியும் பயனில்லாமல், அம்மாவுக்கும் நம்பிக்கை அலுத்துப் போன் நெஞ்சிரலுடனேயே அவளும் செத்துப் போன பின்பா? இத்தனை நாள் கழித்து நேருவதால் எப்படி ஆகுமோ? வெகு நாள் மலடியாக இருந்து விட்டு ஒரு நாள் பூக்கும் மரம். ஒருநாள் பூத்தபின் இத்தனை நாளதையும் சேர்த்து ஒரே ! யாய்ப் பூக் கொட்டினாலும் கொட்டும். அல்லது அந்த ஒரே பூத்தான் ஆக்கும் அத்தோடு சரி. அதுவேதான் காய்க்குமோ, கருகிவிடுமோ? அதற்குப் பின் மரமேதான் இருக்குமோ? இருக்காதோ? திடீரென அவனைப் பீதி கொண்டது பின்னால் யாரோ நின்று அவன் தோள்மேல் மூச்சு விட்டாத் போல் இருந்தது. அவன் மேல் சிலந்திக் கூடுகள் பின்னிக் சுற்றிக் கொண்டன. 'உஷா, உஷா!'- அவள் தோளைப் பிடித்துக் குலுக் கினான். ஆனால் அவளுக்கு நினைப்பு வரவில்லை. கண்கள் மூடியபடியே இருந்தன, உதடுகளின் மேல் ஒரு புன்னகை படர்ந்து உறைந்தது. வெள்ளிச் செம்பில் பதித்த வரலட்சுமி முகப்புப்போல் முகம் திடீரென அழகிட்டது. அதன் உள்ளொளி அவன்மேல் படர்ந்தது. பின்னிடைந்து அவளைப் பார்த்து அதிசயித்து நின்றான். X X 减

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/159&oldid=1247257" இலிருந்து மீள்விக்கப்பட்டது