பக்கம்:இதழ்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இதழ்கள்

74 இதழ்கள் போனான். கண்கள் செருகின. உடலோடு உடற்குறைவில் எத்தனை கேளாக் கேள்விகளுக்குச் சொல்லாப் பதில்கள் கிடைத்துவிடுகின்றன: தீராத சந்தேகங்கள் தீர்ந்து ஆறாத புண்கள் ஆறி விடுகின்றன. ஆனால் ஒரு கேள்வி மாத்திரம் பாம்பின் படம் போல் தலையைத் தூக்கிக்கொண்டு நின்றது. (அதனால்தான் பூக்கள் இருக்கும் இடத்தில் பாம்பு இருக்கும் என்கிறார்களா? 'இது நிஜமா, பொய்யா? "கனவா, தனவா? "நான் துரங்கிக்கொண்டிருக்கிறேனா, விழித்துக்கொண் டிருக்கிறோனா? 'வில்’ என்று தொட்டிவிலிருந்து ஓர் அலறல். “அவனுள் எழுந்த அந்தக் கேள்வியே அவர்கள் கழுத்தில் ஒருங்கே கொடூரத்துடன் விழுந்து மாட்டி, சந்தேகமில்லாத நனவுக்கு இறக்கி இழுத்தது. "இருவரும் வாசலை அடைந்த அந்தச் சமயமே குழந்தை மார்பின் மேலிருந்து ஒரு காகம் கத்திக்கொண்டு எழும்பிச் சிறகுகளை அடித்துக்கொண்டு சென்றது. 'க-ண்-னா!' 'கண்ணனுக்கு மூச்சுத் திணறிற்று. மூர்க்கமான முத்தமாகி அவன் கண்களிலும் மூக்கிலும் கன்னங்களிலும் பெய்தது. “அவள் அவன் கால்களைக் கட்டிக்கொண்டு விக்கி விக்கி அழுதாள. - "கூடத்தில் விளக்கைப் போட மறந்துவிட்டதால், இருள் அங்கே தேங்கிற்று. குத்துவிளக்கின் சுடர் மாத்திரம் இருளில் ... 3- - - - தனியாய், அசைவற்று, மெளனமாய்ச் சாட்சி "'என்னப்பா? பாப்பாவுக்கு என்ன ஆச்சு? "குழந்தையைத் தொட்டிலில் போட்டிருந்தது. அப்பா அம்மாவை அவசரமாய்க் கூப்பிட்டாரா? அம்மா போனாள். அதற்குள் ஒரு காக்கை குழந்தை முகத்தைப் பழம் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/74&oldid=1247172" இலிருந்து மீள்விக்கப்பட்டது