பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. இதிகாசக் கதாவாசகம். ளாகிய துரியோதனன் முதலியோர் பகைமை பாராட்டி வருகின்ருர்கள்; இப்போதே இருதிறத்தாருள்ளும் அதிக மாகப் பிளவு ஏற்பட்டிருக்கின்றது; இன்னும் இவர்கள் நெருங்கி உறைவார்களானுல் இவர்களுள் பகைமை முதிர்ந்து பேரிடர்கள் உண்டாகும்; கிட்டவிருந்தால் முட்டப் பகை என்பது பழமொழி; ஆதலால் பாண்ட வர்களேக் கவுரவரிருக்கும் இடத்தை விட்டு அயலிடத்தில் சிறிது நாள் பிரித்து வைக்கக் கருதியுள்ளேன்; இது பற்றி உங்கள் கருத்தென்ன' என்று உசாவினன். அதற்கு அவர்கள் 'இது விஷயமாக நாங்கள் எகேனும் சொன்னுல் உன் மக்கள் எம் சொல்லேக் கேளார்; நாங்கள் சொல்வதிற் பயனென்றுமில்லை; உனது இஷ்டம் எப்படி யோ அப்படியே செய்க” என்று சொல்வி அவ்விடம் விட் டகன்ருர்கள். அரக்கு மாளிகை. அகன்மேல் திருதாாட்டிரன் கனக்குரியாரோடு மீண் டும் ஆலோசித்துப் பாண்டவர்களே வாரணுவக நகரத்துக் கனுப்பி அவ்விடத்திலேயே அவர்களே முடித்துவிடக்கருதி அவர்கள் அங்கு வசிப்பதற்கு அமைக்கும் மாளிகையை அரக்கு, குங்கிலியம், துணி முதலிய பொருள்களாலேயே கட்டும்படி செய்தான். அவ்வாறே அரக்கு மாளிகை கட்டி முடிந்ததும் திருதாாட்டிரன் பாண்டவர்களைத் தனியாக அழைத்து, வாாணுவத நகரத்தின் மகத்துவத்தை எடுத் துக்கூறி 'அங்கு நீங்கள் சென்று, சந்திரசேகரளுகிய சிவபெருமானைத் தரிசித்து வணங்கி, அத்தலத்திலேயே சின்னுள் தங்கியிருந்து பின்னர் இங்கு வாருங்கள்” என்று சொல்லி அவர்களே உடன்படுத்தி ஏவிஞன். அவர்களும்