பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

14

317

  • எட்டியத்தளி அகிலாண்டேஸ்வரி ? மற்றும் உள்ளுர்க் காளியம்மன் ஆலயங் களைப்பற்றி அருணுசலம் குறிப்பிட் டதைக் கேட்ட மாத்திரத்தில், வையா புரியின் உள்மனத்திலே விளைந்த ஒரு ரசாயன மாற்றம் இன்னமும் அவரை விடுவிக்கவில்லை; வேர்த்து விறுவிறுத் துப் போய்விடுகிறார் !

(துணிவுடன்) மச்சான், சுத்த மோசம் நீர் ! தலைக்கு மேலே வெள்ளம் போய்க்கிட்டு இருக் கையிலே, நேரம் த ப் பி ன இந்தப் பாதிச் சாமத்திலே, எட்டியத்தளி அகிலாண்டேசுவரி யையும் நம்ப ஊர் காளியையும் நினைவுபடுத்த லாமா?...நம்ப குடும்பத்தின் இந்தத் திருமண வைபவம் நம்ம ஜாதி முறைப்படியே திருமணப் பெண் வீடாகிய என் வீட்டு மாடிப் பந்தலி லேயே நடந்திடட்டும்; நமக்கு அனுசரணை யான நாட்டாண்மைக்காரன், ஆறுதலைக் கட்டுப் புள்ளி இப்படி ஒரு அஞ்சாறு பேருங் களைக் கூப்பிட்டுக்கிடுவோம். ப ஞ் ச | ய த் து பிரசிடெண்டு தேவையில்லை. எங்க நல்லத்தா, ஆச்சிமகள், உங்க ஆயா இப் படி நாலு பொம்பளைங்க இருக்தாலே போதும் !- ஆக, பொழுது பல ர் னு விடியறதுக்குள்ளவே திருப்பூட்டு நடந்து முடிஞ்சாகவேனும் ! ஆகச்சே, உம் மகன் முத்துவைக் கண்ணிலே விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு கண்காணிக்க வேண்டியது உம்மோட பொறுப்பு மற்றப்படி காப்பிக்கடை அய்யர்சாமி மந்திரம் ஒதி, கெட்டி மேளம் தட்டி, என் அருமை ராசாத்தி பவளம் கழுத்திலே உம் மகன் மூத்து திருப்பூட்டி மூணு