பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227


கை விளக்கைத் துண்டி விட்டவளாக, குடிசைக் கதவுப் படலின் தாழ்ப்பாளை விலக்கி, உச்சமடைந்த எச்சரிக்கைப் பண்புடனும், எல்லை தொட்ட மன வல் லமையுடனும் திட்டி வாசலில் ஒட்டி கின்று, சுற்றிச் சூழ விளக்கை ஏந்திப் பார்வை யிடுகிருள் ஏந்திழையாள். கும் மிருட்டிலே, சந்தேகத்திற்கான தடயம் எதுவுமே தட்டுப்படாமற் போகவே, வாய் எச்சிலைக் காறி உமிழ்ந்தபின், இனம் விளங்காத பயத்தின் உணர்வு களோடு குடிசைக்குள் பாய்ந்து, பதட் டத்துடன் நாதாங்கியைப் போட்டு விட்டு, மீளவும் வெற்றிலைக் குட்டானைத் தஞ்சமடைகிருள் மீனட்சி !... ஆளுல்-? வண்டிக்கார முரடன் வேலன் அதோ, அந்தச் சனி முடுக்குக் கருவேலம் பத்தையினின்றும் தீப்பெட்டியும் கையு மாக வெளிப்படுகிருன் !

அடடே, இந்தச் சமயத்தில் தான அவனது இரண்டு பாதங்களிலும் கச்சுக் கருவேலமுள் ஆழமாகத் தைத்துத் தொலைய வேண்டும? -

பாவம் !...

திரை