பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 f.

பூசாரி விபூதி குங்குமத்தை முத்துவுக்கு மட்டும் கொடுக்கிறார் ஆல்ை, பூரணி முதலிய பெண்களை ஒதுக்கி விடுகிறார். இந்த வித்தியாசத்தைக் கவனித்த முத்து மனம் கொதிக்கிருன். அவனே விபூதி மடலை எடுத்து பூரணி முதலிய வர்களுக்குக் கொடுக்க எண்ணும் போது, அவனை முக்திக்கொண்டு பூரணி கோயிலின் உள்ளே நுழைந்து, விபூதி பிரசாதத்தை எடுத்து, தானும் பூசிக் கொண்டு, தன் தோழிகளுக்கும் கொடுத்துக் கொண்டு வரும் போது, முத்துவின் நீட்டிய கரங்களிலே, அவள் -பூரணி கொடுத்த விபூதி குங்குமம் சிதறுகிறது.

முத்து மகிழ்வுடன. பூரணியை நோக்கிய படியே விபூதி குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்கிருன்.

பூசாரிக்கு அழகு காட்டி விட்டு, பூரணி தோழிகளுடன் புறப்படுகிருள்.

திரை