பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

கள், அவர்களை ஆதரித்த அரசர்கள், அந்த அரசர் பெருமக்கள் நிறைந்த அந்தப் பழைய தமிழகம் எல்லாம் நம் கண் முன்னால் வராமல் போகா. புதிதாகச் சிற்ப உருவங்களை அதிலும் இப்படிப்பட்ட அற்புதச் சிற்பச் செல்வங்களை இன்று வடித்தெடுப்பது என்பது இயலாத காரியம். அந்தத் தலைமுறைச் சிற்பிகளே இன்று நாட்டில் இல்லை. இந்தச் சிலை உருவங்களைப் போற்றிப் பாதுகாக்கவாவது தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? அப்படிப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதுதான் தஞ்சை கலைக்கூடம். அதனால்தான் இந்த மூர்த்திகள் இன்று தற்காலிகமாக இந்தக் கலைக்கூடத்தில் மின்னும் மின்சார விளக்குகளிடையே அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அழகை எல்லாம் கண்டுகளிக்க வேண்டுமானால் நீங்கள் தஞ்சை செல்ல வேண்டும்.