பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13
தென்னிந்தியக் கோயில்
அமைப்பும் பண்பாடும் - கோயில்கள்

னது நண்பர் ஒருவர் பழநிமலை அடிவாரத்தில் குடி இருக்கிறார். அவருக்குப் பழநி ஆண்டவனிடத்திலே நிறைந்த பக்தி. ஒவ்வொரு ஆண்டும் வருஷப் பிறப்பன்று விழித்ததும் முதன் முதல் கண்டு தொழ விரும்புவது பழநி ஆண்டவனையே. அதற்காக, அவர் அன்று படுக்கையை விட்டு அதிகாலையிலேயே எழுந்து ஸ்நானம் எல்லாம் முடித்து விட்டு சுற்றி வரும்போதும், கோயிலுக்குள் நுழைந்து சந்நிதியில் சென்று உட்காரும்போதும் குனிந்து கொண்டே இருப்பார். தலை நிமிரமாட்டார். கண்ணைக்கூட அகல விழிக்காமல் மூடிக் கொண்டேதான் நடப்பார். வலம் வருவார். அர்த்தமண்டப வாயில் திறப்பது வரை இப்படியே இருந்து கதவு திறந்ததும் கண்விழித்து ஆண்டவனைக் கண் குளிரத் தரிசிப்பார். நாம் எல்லாம் நண்பரைப் போல அத்தனை பக்தி உடையவர்கள் அல்ல என்றாலும் கோயில்களுக்குத் தினசரி செல்வோம். இறைவன் சந்நிதியையும் அடைவோம்.

140