பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

மக்களின் அறிவு விருத்திக்கு கல்விச் சாலைகள் ஏற்பட்டது போலவே மக்கள் உடல் நலத்தைப் பாதுகாக்க மருத்துவ சாலைகளும் கோயில்களுக்குள்ளேயே இருந்திருக்கின்றன. பதினோராம் நூற்றாண்டில் உள்ள ஒரு சோழர் கல்வெட்டிலிருந்து 15 படுக்கைகள், ஒரு மருத்துவர், ஒரு ரண வைத்தியர், இரண்டு தாதியர் இன்னும் இதர சிப்பந்திகள் கொண்ட ஒரு மருத்துவ சாலையே நடந்திருக்கிறது ஒரு கோயிலில் என்பது தெரியவருகிறது. மருந்துகளும் மூலிகைகளும் கூட அங்கு ஏராளமாய்ச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. இதோடு கால்நடை மருத்துவசாலைகள் கூட கோயில் ஆதரவில் நடந்திருக்கின்றன என்றால் கேட்பானேன்.

கோயிலை ஒட்டி எழுந்த இந்த ஸ்தாபனங்களை நிர்வகிக்க ஸ்தானீகர்களும் காரியஸ்தர்களும் இருந்திருக்கின்றனர். பொருளைக் காவல் காக்க பண்டாரிகள், பூசைகள் எல்லாம் சரியாய் நடக்கிறதா என்று பார்க்க தேவகர்மிகள், இவர்களுக்கு எல்லாம் மேலே அதிகார புருஷர்கள், அவர்களுக்கு ஆலோசகர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள். இப்படி மக்களை எல்லாம் சமுதாய வாழ்விலும், கலை ஆர்வத்திலும், பொருளாதாரத் துறையிலும் ஒன்று சேர்க்கும் பெரிய நிலையமாக அல்லவா இக்கோயில்கள் உருவாகி இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு கலா நிலை யத்தை நடுநாயகமாகக் கொண்டே மக்கள் வாழ்வு சிறந்திருக்கிறது. என்றுமே சிறந்திருக்க இவை உதவுதல் கூடும் என்றும் நமக்குத் தெரிந்தால் போதாதா?

153