பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34


க.உ. ஹெர்! ஹெர்! (சார்! சார்! ) ரேடியோ உத்தியோகஸ்தர், நமது கப்பலக்கருகில் எதிரிகளுடைய கடல் மூழ்கிக் கப்பல் நெருங்குகிற சப்தம் கேட்கிறதாகச் சொல்கிறார்!

ஹெ. சீச்சீ! எதிரிகளுடைய கடல் மூழ்கிக் கப்பல் ஒன்றும் இங்கில்லை- நான் முக்கியமான வேலையிலிருக்கிறேன் - இப்பொழுது யாராவது எனக்குக் குறுக்காக வந்தால் அவர்களை உடனே சுட்டுவிடுவேன்!

(கடற்படை உத்தியோகஸ்தன் போகிறான்)

அ. ஆம் ஐயா - என் பிள்ளைக்கு நான் புத்தி சொல்கிறேன்.

ஹெ. அதுதான் சரி! கிழவனாகிய உனக்கு கொஞ்சம் புத்தியிருக்கிறது.

அ. (ஒரு மாலுமி விஸ்வத்தையருகில் அழைத்துக்கொண்டு போய்விட) அப்பா! விஸ்வம் ! உனக்கு நான் கூறும் என் கடைசி வார்த்தைகளைக் கேள்-கேவலம் இந்த உடல்களுக்காக ஒன்றையும் கருதாதே! இவைகளெல்லாம் என்றைக்காவது ஒரு நாள் அழியப் போகின்றவை! - என்றும் அழியாததான - உன் ஆன்மாவைக் காப்பாற்று ! உன்னுடைய தாயார், உன் மனைவி, உன் மகன் இவர்களுடைய மனதை நான் திடப்படுத்தி விட்டேன். -இந்த பெரிய மனிதரிடம் - ஒன்றையும் சொல்லாதே!

ஹெ. ஓ! - இதுதான நீ கூறும் புத்தி !- இந்த இந்தியர்கள் ஒருமாதிரியானவர்கள் ! (வெளியில் பெரிய சப்தம் கேட்கிறது)-ஹா வெளியில் ஏதோ அபாயம் நேரிட்டிருக்கிறது! என் தலைவருக்கு நான் செய்யவேண்டிய கடமையைச் சீக்கிரம் செய்துமுடிக்கிறேன் - விஸ்வம்! 10 வினாடி உனக்கு கொடுக்கிறேன். அதற்குள்ளாக நீ இனங்காவிட்டால், நான் சொன்னபடி பழிவாங்குவேன். (மாலுமிகளை நோக்கி) பசங்களா தயாராக இருங்கள்! (தன் கடியாரத்தை எடுத்து கணக்கிடுகிறான்) ஒன்று - இரண்டு - மூன்று - நான்கு - (வெளியில் துப்பாக்கி சுடுகிற சப்தம்) அந்த அறை-