________________
65 'சர்க்கா' வுக்கு வந்த ஆபத்து ஆனால் ஒன்று; திறப்பு விழாவுக்கு முதல்நாள் வரையில் அந்த நினைவகத்தின் மீது கம்பீரமாக காட்சி தந்த “சர்க்கா” திடீரென அகற்றப்பட்டு விட்டது. சர்க்கா, பழைய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்ன மென எண்ணிக் கொண்டார்கள் போலும்! அதுகூடத் தவறு! சர்க்கா சுற்றும் பெண்ணுடன் கூடியதுதான் தேர்தல் சின்னம். காங்கிரஸ் கட்சியின் கொடியில் சர்க்கா இருக்கலா மாம்! காமராசர் நினைவகத்தின் மீது இருக்கக் கூடா தாம்! காமராசர் நினைவகம் க்ட்டி முடிக்கப்பட்டது கழக அரசால்! அங்கே பெயர் பொறித்துக் கொண்டது இந்திரா காந்தி- அத்துடன் நின்றதா? வையம் புகழத்தக்க அளவுக்கு அமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தின் திறப்பு விழாவையும் கவர்னர் ஷாவின் தலைமையில் குடியரசுத் தலைவர் பக்ருதீன்அலி அகமதுதான் நடத்தி வைத்தார். அந்தக் கோட்டம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப் பட்டிருந்தது அல்லவா? அதில் என் பெயரும், நாவலர், பேராசிரியர், ஆகியோர் பெயரும் இருந்தன -திறப்பு விழாவுக்கு முன்பு அந்த அடிக்கல்லைப் பெயர்த்து எங்கேயோ எறிந்து விட்டார்கள். ஒரு ஊராட்சி ஒன்றியக் கட்டிடத் திறப்பு விழாவை விடச் சாதரணமாக வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை நடத்தினார்கள். அரசு அலுவலங்களில் இருந்த வள்ளுவர் படங்கள், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் படங்கள் அகற்றப்பட்டன. கன்