130 நம் தாய்
பட 2 : என்னா சாமி! பூமியிலே இருந்து வடிகட்டின இந்த மஞ்சள் மண்ணாங்கட்டிக்கு, தங்கம்னு ஒரு புதுப்பேர் கொடுத்து, தெய்வம் கிய்வம்.கிறீங் களே! எனக்கும் சிரிப்பு வருது சாமி.
பட 1 : டேய் டேய்! சாமி சொல்றது சத்தியமான பேச்சு. நாலுபேத்துக்கு மேலே நாமும் இருக்கணும்னா இது இல்லாட்டி முடியுமா? இதைப்பத்தி என் பாட்டி சொல்லித் தந்த பாட்டு நெனவு வருது.
பொன் ; மற்றொரு ஆளுடன் உள்ளே சென்று, அங்கு வண்டியில் வைத்திருந்த மற்ற பைகளையும் கொண்டுவரும் பணியிலிடுபடும்போது, முதல் ஒடக்காரன் பாடுகிறான்.
பாட்டு -
பணமென்னுந் தோணியிலே - அகிலேசா
பதவியென்னும் பாய்விரிப்போம் - ஆமாண்டா
பொய்யென்னுந்துடுப்பாலே நீந்திடுவோம்
பெருமையென்னும் கடல்தாண்டிப் போயிடலாம் - கேட்டியா
நீதியெனும் முதலைவரும் அப்போது
சூழ்ச்சியெனும் ஈட்டியாலே தீத்துடு
சோதனைத்திமிங்கிலமே வந்தாலும்
தந்திரமாம் வோட்டுப்போட்டு சுட்டுடு - கேட்டுக்கோ
உண்மையென்னும் பலபாறை - அண்ணாத்தே உன்வழியைமறிச்சாலும் அஞ்சாதே
தன்னலமாம் காத்தோட - சேந்துக்கோ
செல்வமென்னும் கரைநோக்கித்திருப்பிக்கோ
ஆமாம் சுக்கான் திருப்பிக்கோ.
இதைக் கவனத்துக்கொண்டிருந்த பொன் மேனி)
பொன் : ஆகா! அருமையான பாட்டு. யாராப்பா
பாடினா?