16
இந்தியா எங்கே?
அவசியமில்லை. உன்னைப் போன்ற ஏமாளிகள்தான் சுதந்திரத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள்” என்று சொல்கிறாயா? அப்படியெல்லாம் சொல்லாதே. நீ உன் நன்மையை முன்னிட்டாவது இதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
நீ இப்போது அனுபவிக்கும் மாடி வீடு, ஆடும் ஊஞ்சல், பாடும் கலைகள், பறக்கும் மோட்டார்கள், பிணத்துக்கும் ஆசை ஊட்டும் சுவைமிக்க உணவு, போதையூட்டும் மதுபானங்கள் இவையெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு நீடிக்க வேண்டுமானால் நீ கூட கொஞ்சம் சுதந்திரத்தைப் பற்றி நினைக்கத்தான் வேண்டும்.
உனக்காக இல்லாவிட்டாலும் பிறத்தியார் உன்னை ஏதோ கொஞ்சம் தெரிந்தவன் என்று மதிக்க வேண்டுமானால் நீ சுதந்திரத்தின் கதையையும் தெரிந்து கொள்வது நல்லது.
'ஆ என்ன சுதந்திரம்? எனக்கு மட்டும் தெரியாதா? ஏதோ வெள்ளைக்காரனுக்கு நம் மேல் வெறுப்பு ஏற்பட்டு விட்டது. விட்டு விட்டுப் போய்விட்டான். இங்கு இருப்பவன் விடுதலைக்காக என்ன செய்து விட்டான்?
“ஏதோ சந்தர்ப்பவசத்தால் வெள்ளைக்காரனுடன் ஒப்பந்தம் பேசி, பதவிகளில் ஒட்டிக் கொண்டான். பல வருஷம் அனுபவித்தார்கள் வயதாகி விட்டது. செத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது நாங்கள் அனுபவிக்கிறோம். எங்களைப் போலவே பின்னால் வருபவர்களும் அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.
“இது எல்லா நாடுகளிலும் எழுதப்படும் ஒரு தேசியத் தொடர் கதை. தலைவர்கள் நிறைய தியாகம் செய்து சுதந்திரத்தைப் பெற்றார்கள் என்பாய்! இவர்களை யார் தியாகம் செய்யச் சொன்னது? மட்டும் நாங்கள் நினைத்திருந்தால் எங்கள் அடுக்குச்சொல் ஆயுதத்தைக் கொண்டே அயலானைத் துரத்தியிருப்போம்”