இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
50
இந்தியா எங்கே?
வஞ்சனை சூதுலஞ்சப் பாவியை
மிஞ்சவும் விடலாமா? ரெண்டு
எஞ்சின் ரிப்பேர் ஏரோப்ளேன்ல்
ஏறிச் சாகலாமா?
ஆவிகொடுத்து மக்கள் தருகிற - வரியைத் திருடலாமா? அந்தப்
பாவியின் பிள்ளைபெரிய தலைவனாய்
பவனிகள் வரலாமா?
ஏழை எளியவன் துட்டுவாங்கினால் எட்டுமாசம் ஜெயிலாம்!
பாழாப் போன படிச்சவன் லட்சம்
பனங்கள் வாங்கலாமா?
பட்டம் பதவிபடைச்சவன் எல்லாப் பாவம் செய்யலாமா? கழுதை
சட்டம் அவனைக் காக்கும்என்ற
தைரியம் வரலாமா? -
எத்தனை ஆயிரம்திட்டம் வந்தும்
ஏன்விளங்க விளங்கவில்லை? இங்கு
இத்தனைகோடி மக்கள் இருந்தும்
ஏன் துலங்க வில்லை?
அத்தனைபேரும் சேர்ந் துழைத்தால்
ஆகாததும் உண்டோ? அரசியல்
சொத்தைகளான சோம்பேறி கும்பல் சொரணை பெற்றிடுமா?
வித்தைகள் செய்யும் மந்திரவாதி
உழவுகள் செய்வானா? சுத்தி வளைச்சிப் பேசும்மந்திரி
சோறு போடுவானா?